என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

தொடர்கதை... மன்னார்குடியில் பேருந்துகள் நேருக்குநேர் மோதி விபத்து - 20க்கும் மேற்பட்டோர் படுகாயம்!
- 3 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக தகவல்
- தொடர் பேருந்து விபத்துகள் மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி, கோட்டூர் பகுதியில் உள்ள வளைவில் அரசு பேருந்தும், தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதியதில் விபத்துக்குள்ளானது. திருத்துறைப்பூண்டியில் இருந்து மன்னார்குடி நோக்கி சென்ற அரசு பேருந்தும், மன்னார்குடியில் இருந்து திருத்துறைப்பூண்டிக்கு வந்த தனியார் பேருந்தும் நேரத்தில் நேருக்கு நேர் மோதி கொண்டன.
இந்த விபத்தில் 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்கள் மீட்கப்பட்டு திருவாரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 3 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த விபத்து குறித்து மன்னார்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கடந்த மாதம் தென்காசியில் இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 7 பயணிகள் உடல் நசுங்கி இறந்தனர். இந்த விபத்தை தொடர்ந்து கடந்த 31-ம் தேதி காரைக்குடி அருகே 2 அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 9 பெண்கள் உள்பட 11 பேர் உடல் நசுங்கி பலியானார்கள். 50-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்நிலையில் இப்பேருந்து விபத்து நிகழ்ந்துள்ளது.
தொடர் பேருந்து விபத்துகள் மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.






