என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
முல்லைப்பெரியாறு அணையில் மரங்களை வெட்ட மத்திய மந்திரியிடம் தமிழக விவசாயிகள் மனு
- பேபி அணையை பலப்படுத்தும் பணிக்கு இடையூறாக உள்ள 13 மரங்களை அகற்ற கேரள வனத்துறை தொடர்ந்து அனுமதி மறுத்து வருகிறது
- மத்திய வனம், சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றத்துறையின் சார்பில் ஆய்வு நடத்தி மரங்களை அகற்றவும், வல்லக்கடவு சாலையை சீரமைக்கவும் உத்தரவிட வேண்டும்.
கூடலூர்:
தேனி மாவட்டம் பாரதிய கிசான் சங்க தலைவர் சதீஸ்பாபு, முல்லைச்சாரல் விவசாய சங்க நிர்வாகிகள் கொடியரசன், ஜெயபால், ராஜா உள்ளிட்டோர் தேக்கடியில் யானைகள் தின விழாவில் கலந்துகொண்ட மத்திய மந்திரி பூபேந்திரயாதவ், அஸ்வின் குமாரை சந்தித்தனர்.
மேலும் அவர்களிடம் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் கோரிக்கை மனுவை அளித்தனர். அதில் அவர்கள் குறிப்பிட்டு இருந்ததாவது:-
கடந்த 2014ம் ஆண்டு உச்சநீதிமன்றம் முல்லைப்பெரியாறு அணையை பலப்படுத்துவதற்கு பேபி அணையில் பராமரிப்பு பணிகள் செய்து 142 அடி வரை தண்ணீரை தேக்கி கொள்ளலாம் என்றும், பின்னர் 2 அணைகளையும் பலப்படுத்தி 152 அடி வரை தண்ணீர் தேக்கி கொள்ளலாம் எனவும் உத்தரவிட்டது.
ஆனால் பேபி அணையை பலப்படுத்தும் பணிக்கு இடையூறாக உள்ள 13 மரங்களை அகற்ற கேரள வனத்துறை தொடர்ந்து அனுமதி மறுத்து வருகிறது. வல்லக்கடவு தொடர்பு சாலையையும் பராமரிக்க அனுமதிக்கவில்லை.
மத்திய வனம், சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றத்துறையின் சார்பில் ஆய்வு நடத்தி மரங்களை அகற்றவும், வல்லக்கடவு சாலையை சீரமைக்கவும் உத்தரவிட வேண்டும் என மனுவில் தெரிவித்திருந்தனர். மனுவை பெற்றுக்கொண்ட மத்திய மந்திரி ஆவண செய்வதாக உறுதியளித்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்