என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
1, 2-ம் வகுப்பு மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் கொடுக்கக்கூடாது- பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
- 1-ம் வகுப்பு முதல் 2-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு வீட்டுப் பாடங்கள் கொடுக்கப்படுவதை தடை செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
- உத்தரவை அமல்படுத்தியதை பறக்கும்படை கொண்டு ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை தருமாறு கோரப்பட்டது.
சென்னை:
தமிழக பள்ளி கல்வித்துறை அனைத்து வட்டார கல்வி அதிகாரிகளுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. அதில் கூறி இருப்பதாவது:-
1-ம் வகுப்பு முதல் 2-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு வீட்டுப் பாடங்கள் கொடுக்கப்படுவதை தடை செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை அமல்படுத்தியதை பறக்கும்படை கொண்டு ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை தருமாறு கோரப்பட்டது.
ஆனால் இதுவரை எந்த ஒரு வட்டார கல்வி அதிகாரிகளிடமும் இருந்து எந்த ஒரு அறிக்கையும் வரவில்லை. எனவே காலதாமதம் செய்யாமல் அனைத்து வட்டார கல்வி அலுவலர்களும் கடந்த 3 மாதங்களில் பள்ளிகளை பார்வையிட்டு ஆய்வு செய்ததை தேதி வாரியாக அனுப்பி வைக்க வேண்டும்.
மேலும் பார்வையிட்ட பள்ளிகளில் 1 முதல் 2-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு வீட்டுப் பாடங்கள் கொடுக்கப்பட்டதா? இல்லையா? என்பதை பள்ளி வாரியாக அறிக்கையில் குறிப்பிட வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்