என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
நெல்லையில் இருந்து தென்காசி, மதுரை வழியாக தாம்பரத்துக்கு சிறப்பு ரெயில்
- நிறுத்தப்பட்ட ரெயில்சேவை மீண்டும் சிறப்பு கட்டண சிறப்பு ரெயில் சேவையாக தொடங்க உள்ளது.
- வழக்கமான ரெயில் கட்டணத்தை விட இந்த ரெயிலில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
மதுரை:
தென்னக ரெயில்வே சார்பில், நெல்லையில் இருந்து தென்காசி வழியாக வாராந்திர சிறப்பு ரெயில் இயக்கப்பட்டு வந்தது. இந்த ரெயில்சேவை கடந்த மாதம் வரை இருந்தது. இதற்கிடையே, நிறுத்தப்பட்ட ரெயில்சேவை மீண்டும் சிறப்பு கட்டண சிறப்பு ரெயில் சேவையாக தொடங்க உள்ளது.
அதன்படி, இந்த ரெயில் வருகிற 7-ந் தேதி முதல் செப்டம்பர் மாதம் 4-ந் தேதி வரை இயக்கப்பட உள்ளது. இதையடுத்து, நெல்லை-தாம்பரம் வாராந்திர சிறப்பு ரெயில் (வ.எண்.06004) ஞாயிற்றுக்கிழமைகளில் நெல்லையில் இருந்து இரவு 7 மணிக்கு புறப்பட்டு இரவு 8.30 மணிக்கு தென்காசி ரெயில் நிலையம் வந்தடைகிறது. நள்ளிரவு 1.15 மணிக்கு மதுரை ரெயில் நிலையம் வந்தடைகிறது.
மறுநாள் காலை 9.20 மணிக்கு தாம்பரம் ரெயில் நிலையம் சென்று சேரும். மறுமார்க்கத்தில் தாம்பரம் - நெல்லை வாராந்திர சிறப்பு ரெயில் (வ.எண்.06003) வருகிற 8-ந் தேதி முதல் செப்டம்பர் மாதம் 5-ந் தேதி வரை திங்கட்கிழமைகளில் தாம்பரத்தில் இருந்து இரவு 10.20 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 5.35 மணிக்கு மதுரை வந்தடைகிறது. காலை 8.30 மணிக்கு தென்காசி ரெயில் நிலையம் சென்றடைகிறது. காலை 10.35 மணிக்கு நெல்லை ரெயில் நிலையம் சென்றடையும். இந்த ரெயிலில், வழக்கமான ரெயில் கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ரெயில்கள் செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், தென்காசி, பாவூர்சத்திரம், கீழக்கடையம், அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.
இந்த ரெயில்களில் ஒரு 2-அடுக்கு குளிரூட்டப்பட்ட பெட்டி, 2 மூன்றடுக்கு குளிரூட்டப்பட்ட பெட்டிகள், 7 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள், 3 இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டிகள், கார்டு வேனுடன் இணைந்த மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டி மற்றும் பார்சல் பெட்டியுடன் இணைந்த பொதுப்பெட்டி ஆகியன இணைக்கப்பட்டிருக்கும்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்