search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    போதைப் பொருட்களை ஒழிக்க வேண்டும்: அன்புமணி தலைமையில் பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம்
    X

    போதைப் பொருட்களை ஒழிக்க வேண்டும்: அன்புமணி தலைமையில் பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம்

    • போதைப் பொருட்களை ஒழிக்க நடவடிக்கை எடுக்க தமிழக அரசை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
    • போதைப் பொருள்களின் விற்பனையை தடுத்து நிறுத்த வேண்டும் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தினார்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் இளைய தலைமுறையினரை சீரழிக்கும் போதைப் பொருட்களை முற்றிலுமாக ஒழிக்க நடவடிக்கை எடுக்க கோரி பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஆர்ப்பாட்டத்திற்கு பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் டாக்டர் அன்புமணி இராமதாஸ் தலைமை தாங்கினார். ஏ.கே.மூர்த்தி, கே.என்.சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போதைப் பொருட்களை ஒழிக்க நடவடிக்கை எடுக்க தமிழக அரசை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    ஆர்ப்பாட்டத்தில் டாக்டர் அன்புமணிராமதாஸ் பேசியதாவது:-

    போதைப் பொருட்களை முற்றிலுமாக ஒழிக்க வலியுறுத்தி பா.ம.க. சார்பில் இன்று தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டு வருகிறது. போதைப் பொருள்களின் விற்பனையை தடுத்து நிறுத்த வேண்டும்.

    எதிர்காலத் தமிழகத்தின் தூண்களான இளைஞர்கள் போதைக்கு அடிமையாகி சீரழிந்து வருகிறார்கள். பள்ளிக் கூட வாசல்களில், போதைப் பொருள்கள் கிடைக்கிறது. கைக்கு எட்டிய போதைப் பொருளால், மாணவச் சமூகம் அழிகிறது. போதைப் பழக்கக் கேட்டில் இருந்து தமிழக மக்களைக் காப்பாற்ற வேண்டும். மதுக்கடைகளால் தமிழ்நாடு சுடுகாடாக மாறுகிறது. 50 லட்சம் பேர் தமிழ் நாட்டில் போதைப் பொருள் பழக்கத்துக்கு அடிமையாகி வருகிறார்கள். போதை வணிகத்தைத் தடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×