search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கோவையில் பெட்ரோல் குண்டுவீச்சு- தலைமை செயலாளர் இறையன்பு ஆலோசனை
    X

    கோவையில் பெட்ரோல் குண்டுவீச்சு- தலைமை செயலாளர் இறையன்பு ஆலோசனை

    • கோவையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தொடர்பாக தலைமை செயலாளர் இறையன்பு இன்று ஆலோசனை மேற்கொண்டார்.
    • கோவையில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கோவை:

    கோவை மாநகரில் கடந்த சில நாட்களாக குனியமுத்தூர், ஒப்பணக்கார வீதி, 100 அடி ரோடு, காந்திபுரம் உள்பட சில இடங்களில் பெட்ரோல் மற்றும் மண்எண்ணெய் குண்டு வீசப்பட்டது. இதனால் கோவையில் பதட்டமான சூழ்நிலை உருவாகியுள்ளது. இதையடுத்து போலீசார் கோவையில் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் கோவையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தொடர்பாக தலைமை செயலாளர் இறையன்பு இன்று ஆலோசனை மேற்கொண்டார்.

    சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொளி காட்சி மூலம் கோவை மாவட்ட கலெக்டர் சமீரன், ஐ.ஜி.சுதாகர், மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் ஆகியோருடன் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது கோவையில் அமைதியை ஏற்படுத்துவது உள்பட பல்வேறு ஆலோசனைகளையும் வழங்கினார்.

    Next Story
    ×