search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    நெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கோலாகலம்- திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்

    • நெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டும்.
    • ஆயிரங்கால் மண்டபத்தில் அமைக்கப்பட்டிருந்த மணமேடையில் மணக்கோலத்தில் காந்திமதி அம்பாள் அருகே சுவாமி நெல்லையப்பர் எழுந்தருளினார்.

    நெல்லை:

    தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் நெல்லை டவுன் நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் கோவிலும் ஒன்றாகும். இங்கு ஐப்பசி திருக்கல்யாண திருவிழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டும்.

    இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 12-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 15 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவின் சிகர நிகழ்ச்சிகளில் ஒன்றான திருக்கல்யாண உற்சவம் இன்று அதிகாலை கோவிலில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் பிரம்ம முகூர்த்தத்தில் நடைபெற்றது.

    முன்னதாக கோவில் நடை அதிகாலை 1 மணிக்கு திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து சுவாமி நெல்லையப்பர் தங்கப்பல்லக்கில் மாப்பிள்ளை கோலத்தில் அம்பாள் சன்னதிக்கு பஞ்ச வாத்தியங்கள் மற்றும் மேள, தாளங்கள் முழங்க எழுந்தருளினார்.

    பின்னர் சுவாமி நெல்லையப்பரை மைத்துனர் நெல்லை கோவிந்தர் கோவில் ஆயிரங்கால் மண்டபம் முன்பு வரவேற்று அவருக்கு பாத பூஜை செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் ஆயிரங்கால் மண்டபத்தில் அமைக்கப்பட்டிருந்த மணமேடையில் மணக்கோலத்தில் காந்திமதி அம்பாள் அருகே சுவாமி நெல்லையப்பர் எழுந்தருளினார்.

    தொடர்ந்து பிரம்ம முகூர்த்தத்தில் சுவாமி-அம்பாளுக்கு மாலை மாற்றபட்டு திருமாங்கல்யம் பூட்டப்பட்டது. அதன்பின்னர் சுவாமி-அம்பாளுக்கு திருமண சடங்குகள் செய்யப்பட்டு மகா தீபாரதனை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா நோய் தொற்று காரணமாக திருக்கல்யாணம் உற்சவத்தின்போது பக்தர்கள் அனுமதிக்கப்படாத நிலையில் இன்றைய தினம் நடைபெற்ற விழாவில் தளர்வுகள் காரணமாக திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    விழாவையொட்டி காலை 9.30 மணிக்கு சுவாமி-அம்பால் பூம்பல்லக்கில் பட்டிணப்பிரவேசம் வீதி உலா சென்றனர். மேலும் இன்று முதல் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) வரையிலும் 3 நாட்கள் ஊஞ்சல் விழா நடக்கிறது.

    Next Story
    ×