search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 15 ஆயிரம் கன அடியாக சரிவு
    X

    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 15 ஆயிரம் கன அடியாக சரிவு

    • ஒகேனக்கல் காவிரியில் வரும் தண்ணீர் அப்படியே மேட்டூர் அணைக்கு வருகிறது.
    • மேட்டூர் அணைக்கு நீர்வரத்து இன்று காலை மேலும் சரிந்து வினாடிக்கு 15 ஆயிரம் கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.

    மேட்டூர்:

    கர்நாடகா மற்றும் கேரளாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து குறைந்துள்ளது.

    இதையடுத்து அந்த அணைகளில் இருந்து உபரி நீர் திறப்பு படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது. இதனால் ஒகேனக்கலுக்கு நீர்வரத்து நாளுக்கு நாள் படிப்படியாக சரிந்து வருகிறது.

    ஒகேனக்கலில் நேற்று முன்தினம் 26 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று மாலை 17 ஆயிரம் கன அடியாக சரிந்தது. ஆனாலும் ஒகேனக்கலில் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் அருவிகளில் குளிக்க தொடர்ந்து தடை நீடிக்கிறது.

    ஒகேனக்கல் காவிரியில் வரும் தண்ணீர் அப்படியே மேட்டூர் அணைக்கு வருகிறது. மேட்டூர் அணைக்கு நேற்று காலை வினாடிக்கு 21 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை மேலும் சரிந்து வினாடிக்கு 15 ஆயிரம் கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.

    அணையின் முழு கொள்ளளவான 120 அடியாக நீடிப்பதால் அணைக்கு வரும் தண்ணீர் கடந்த சில நாட்களாக அப்படியே காவிரியில் வெளியேற்றப்படுகிறது. அதன்படி அணையில் இருந்து இன்று காலையும் 15 ஆயிரத்து 600 கன அடி தண்ணீர் காவிரியில் திறந்து விடப்பட்டுள்ளது.

    இதில் 15 ஆயிரம் கன அடி தண்ணீர் நீர்மின் நிலையங்கள் வழியாகவும், கால்வாயில் 600 கன அடி தண்ணீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக மேட்டூர் அணை உபரி நீர் போக்கி வழியாக தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளதால் அந்த பகுதி வெறிச்சோடி காணப்படுகிறது.

    Next Story
    ×