என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 19 ஆயிரம் கன அடியாக சரிவு
- ஒகேனக்கல் காவிரியில் வரும் தண்ணீர் அப்படியே மேட்டூர் அணைக்கு வருகிறது.
- மேட்டூர் அணையில் இருந்து இன்று காலை 19 ஆயிரத்து 600 கன அடி தண்ணீர் காவிரியில் திறந்து விடப்பட்டுள்ளது.
மேட்டூர்:
கேரளா மற்றும் கர்நாடகாவில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து குறைந்துள்ளது. இதையடுத்து கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து உபரி நீர் திறப்பு படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது.
இதனால் ஒகேனக்கலுக்கு நீர்வரத்து நாளுக்கு நாள் சரிந்து வருகிறது. ஒகேனக்கலில் நேற்று முன்தினம் 28 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று 24 ஆயிரம் கன அடியாக சரிந்தது.
ஆனாலும் ஒகேனக்கலில் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. நீர்வரத்து குறைந்ததால் காவிரியில் பரிசல் சவாரிக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டது.
இதையடுத்து விடுமுறை தினமான நேற்று பல்வேறு பகுதிகளில் இருந்து ஒகேனக்கல் வந்த சுற்றுலா பயணிகள் குடும்பத்தினருடன் உற்சாகமாக படகு சவாரி சென்று அருவியின் அழகை கண்டு ரசித்தனர். நடைபாதை மற்றும் அருவி பகுதிகளில் சேதம் அடைந்த பகுதிகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதால் அருவிகளில் குளிக்க விதிக்கப்பட்ட தடை நீடிக்கிறது.
ஒகேனக்கல் காவிரியில் வரும் தண்ணீர் அப்படியே மேட்டூர் அணைக்கு வருகிறது. மேட்டூர் அணைக்கு நேற்று காலை 30 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை மேலும் சரிந்து 19 ஆயிரம் கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.
அணை முழு கொள்ளளவான 120 அடியாக நீடிப்பதால் அணைக்கு வரும் தண்ணீர் கடந்த சில நாட்களாக அப்படியே காவிரியில் வெளியேற்றப்படுகிறது. அதன்படி அணையில் இருந்து இன்று காலை 19 ஆயிரத்து 600 கன அடி தண்ணீர் காவிரியில் திறந்து விடப்பட்டுள்ளது.
இதில் 19 ஆயிரம் கன அடி தண்ணீர் நீர்மின் நிலையங்கள் வழியாகவும், கால்வாயில் 600 கன அடி தண்ணீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது. நீர்வரத்து குறைந்ததையடுத்து இன்று காலை முதல் 16 கண் வழியாக தண்ணீர் திறப்பு முற்றிலும் நிறுத்தப்பட்டது. இதனால் 16 கண் மதகு மூடப்பட்டு அந்த பகுதி வெறிச்சோடி காணப்படுகிறது.
தண்ணீர் நிறுத்தப்பட்டதால் 16 கண் மதகு பகுதி வெறிச்சோடி காணப்படுகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்