என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 42 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு- கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
- காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை பெய்ய தொடங்கி உள்ளது.
- மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே திறந்து விடப்படுவதால் அணை நீர்மட்டம் 120.10 அடியாக நீடிக்கிறது.
மேட்டூர்:
கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக அங்குள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பியது. இதனால் 2 அணைகளில் இருந்தும் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு விநாடிக்கு 1.31 லட்சம் கன அடி வரை உபரிநீர் வெளியேற்றப்பட்டது.
இதன் காரணமாக காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, கடந்த 16-ந்தேதி மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியது. இதனால் அணைக்கு வந்த தண்ணீர் அப்படியே திறந்து விடப்பட்டது. குறிப்பாக அணையின் உபரிநீர் போக்கியான 16 கண் மதகுகள் வழியாக காவிரி ஆற்றில் விநாடிக்கு 1.25 லட்சம் கன அடி வரை தண்ணீர் வெளியேற்றப்பட்டது.
இதனிடையே காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததை தொடர்ந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு படிப்படியாக குறைந்தது. இதனால் கடந்த 26-ந்தேதி 16 கண் மதகுகள் வழியாக நீர் வெளியேற்றப்படுவது முழுவதுமாக நிறுத்தப்பட்டது.
தற்போது காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை பெய்ய தொடங்கி உள்ளது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
நேற்று முன்தினம் விநாடிக்கு 23 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று இரவு 31 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. இதனால் கடந்த 26-ந்தேதி மூடப்பட்ட உபரிநீர் போக்கியான 16 கண் மதகுகள் மீண்டும் நேற்று முதல் திறக்கப்பட்டு அதன் வழியாக 7 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டது.
இந்த நிலையில் இன்று காலை நீர்வரத்து மேலும் அதிகரித்து அணைக்கு விநாடிக்கு 42 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதையடுத்து அணையில் இருந்து விநாடிக்கு 41 ஆயிரத்து 300 கன அடி வீதம் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டுள்ளன.
அதாவது நீர்மின் நிலையங்கள் வழியாக 23 ஆயிரம் கன அடி, 16 கண் மதகுகள் வழியாக 18 ஆயிரம் கன அடி, கால்வாய் வழியாக 300 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளன.
மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே திறந்து விடப்படுவதால் அணை நீர்மட்டம் 120.10 அடியாக நீடிக்கிறது.
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை தொடர்ந்து பெய்து வருவதால் கர்நாடக அணைகளில் இருந்து எந்த நேரத்திலும் கூடுதலாக தண்ணீர் திறக்கப்படலாம் என்பதால் வருவாய்த்துறை சார்பில் காவிரி கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தாழ்வான பகுதிகளில் குடியிருந்து வரும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு தண்டோரா போட்டு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்