search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பெரியாறு அணையில் கூடுதல் தண்ணீர் திறப்பு
    X

    பெரியாறு அணையில் கூடுதல் தண்ணீர் திறப்பு

    • பருவமழை மற்றும் கோடை மழை கைகொடுத்ததால் முல்லைப்பெரியாறு அணை நீர் மட்டம் சீராக உயர்ந்தது.
    • வைகை அணையிலும் மதுரை, திண்டுக்கல் மாவட்ட பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

    கூடலூர்:

    பருவமழை மற்றும் கோடை மழை கைகொடுத்ததால் முல்லைப்பெரியாறு அணை நீர் மட்டம் சீராக உயர்ந்தது. இதனால் கம்பம் பள்ளத்தாக்கு பகுதி நெல்சாகுபடி பாசனத்துக்காக 1ந் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது.

    இதே போல் வைகை அணையிலும் மதுரை, திண்டுக்கல் மாவட்ட பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. தற்போது மழை குறைந்துள்ள நிலையில் அணைக்கு நீர் வரத்து சரிந்துள்ளது. இருந்தபோதும் தண்ணீர் திறப்பு நேற்று முதல் அதிகரிக்கப்பட்டது. 136 கன அடி நீர் வருகிற நிலையில் முல்லைப்பெரியாறு அணையில் இருந்து 400 கன அடி நீர் திறக்கப்படுகிறது. அணையின் நீர் மட்டம் 132.05 அடியாக உள்ளது. வைகை அணையின் நீர் மட்டம் 61.25 அடியாக உள்ளது. வரத்து இல்லை. அணையில் இருந்து பாசனம் மற்றும் மதுரை மாநகர குடிநீருக்காக 669 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 40.50 அடியாக உள்ளது. 75 கன அடி நீர் வருகிற நிலையில் திறப்பு இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர் மட்டம் 89.38 அடி. வரத்து இல்லாத நிலையில் 6 கன அடி நீர் திறக்கப்படுகிறது. வைகை அணை 10.2, சோத்துப்பாறை 0.5 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.

    முல்லைப்பெரியாறு அணையில் திறக்கப்படும் தண்ணீரின் அளவை பொறுத்து லோயர் கேம்ப் மின் உற்பத்தி நிலையத்தில் 4 ஜெனரேட்டர்களை கொண்டு மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 300 கன அடி நீர் திறக்கப்பட்டபோது 1 ஜெனரேட்டர் மூலம் 27 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டது. நேற்று நீர் திறப்பு 400 கன அடியாக அதிகரிக்கப்பட்டது. இதனால் மின் உற்பத்தியும் 36 மெகாவாட்டாக உயர்ந்துள்ளது.

    Next Story
    ×