என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
மதுரை, சிவகாசியில் நாளை 2 பொதுக்கூட்டங்களில் எடப்பாடி பழனிசாமி பேசுகிறார்
- திருமங்கலம் பகுதியில் ஜெயலலிதா பேரவை சார்பில் முன்னாள் அமைச்சர் உதயகுமார் தலைமையில் எடப்பாடி பழனிசாமிக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது.
- மதுரை வரும் எடப்பாடி பழனிசாமி பழங்காநத்தம் ரவுண்டானா ஜெயம் தியேட்டர் முன்பு நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.
மதுரை:
அ.தி.மு.க.வில் தலைமை பொறுப்பை கைப்பற்றுவதில் முன்னாள் முதலமைச்சர்கள் எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்திற்கும் இடையே தொடர்ந்து போட்டி-யுத்தம் நடந்து வருகிறது.
இந்த நிலையில் அ.தி.மு.க. பொதுக்குழுவில் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்ட நிலையில் ஓ. பன்னீர்செல்வம் இதனை எதிர்த்து நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்துள்ளார். இருவரும் தங்கள் பக்கம் ஆதரவாளர்களையும் இழுத்து வருகிறார்கள்.
ஆனாலும் அ.தி.மு.க.வில் ஒட்டுமொத்த செல்வாக்கும் எடப்பாடி பழனிசாமிக்குத்தான் என்பதை நிரூபிக்கும் வகையில் தென் மாவட்டங்களில் சுற்றுப்பயண ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அதன்படி நாளை (29-ந் தேதி) மதுரை, சிவகாசி ஆகிய இடங்களில் நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்டங்களில் எடப்பாடி பழனிசாமி பேசுகிறார். இதற்காக நாளை காலை 7 மணி அளவில் சென்னையில் இருந்து விமானத்தில் மதுரை வருகிறார். விமான நிலையத்தில் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி. உதயகுமார், ராஜன் செல்லப்பா மற்றும் முக்கிய நிர்வாகிகள் தலைமையில் எடப்பாடி பழனிசாமிக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது.
இதை தொடர்ந்து திருமங்கலம் பகுதியில் ஜெயலலிதா பேரவை சார்பில் முன்னாள் அமைச்சர் உதயகுமார் தலைமையில் எடப்பாடி பழனிசாமிக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது.
பின்னர் காரில் சிவகாசி செல்கிறார். அங்கு முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி ஏற்பாட்டில் நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசுகிறார். அப்போது தி.மு.க. அரசின் செயல்பாடுகளையும், சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகளையும் மையப்படுத்தி எடப்பாடி பழனிசாமி பேசுகிறார்.
இதை தொடர்ந்து காரில் மதுரை வரும் அவருக்கு வழி நெடுகிலும் தொண்டர்கள் வரவேற்பு ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள்.
மதுரை வரும் எடப்பாடி பழனிசாமி பழங்காநத்தம் ரவுண்டானா ஜெயம் தியேட்டர் முன்பு நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். மாலை 6 மணிக்கு எடப்பாடி பழனிசாமி பேசுகிறார். 7 மணிக்கு பொதுக்கூட்டத்தை முடித்துக் கொண்டு ஜெய்ஹிந்துபுரம், வில்லாபுரம் வழியாக விமான நிலையம் சென்று அங்கிருந்து விமானத்தில் சென்னை புறப்படுகிறார்.
இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வுசெய்யப்பட்ட பின்னர் முதன்முறையாக எடப்பாடி பழனிசாமி வருவதால் மதுரை மற்றும் விருதுநகர் மாவட்ட சுற்றுப்பயணங்களில் ஒட்டுமொத்த அ.தி.மு.க. தொண்டர்களையும் திரட்டும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
மதுரை பழங்காநத்தத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் மதுரை மாநகர், மதுரை புறநகர் கிழக்கு, மதுரை புறநகர் மேற்கு ஆகிய 3 மாவட்டங்களை சேர்ந்த அ.தி.மு.க. தொண்டர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்களையும் திரட்ட ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
சுமார் 20 ஆயிரம் பேர் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கும் வகையில் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. ஆகியோர் தீவிர ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்