search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அதிரும் அ.தி.மு.க. - அடுத்த கட்டத்தை நோக்கி ஈ.பி.எஸ்.
    X

    அதிரும் அ.தி.மு.க. - அடுத்த கட்டத்தை நோக்கி ஈ.பி.எஸ்.

    • ஐகோர்ட் தீர்ப்பின் அடிப்படையில் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளரை தேர்வு செய்வதற்கான தேர்தலை நடத்துவதற்கு எந்த தடையும் இல்லை.
    • தேர்தலை நடத்துவதற்கு மாவட்ட வாரியாக பொதுக்குழு உறுப்பினர்களிடம் கையெழுத்து வாங்கும் நடைமுறையை தொடங்கி உள்ளார்.

    அ.தி.மு.க.வில் எழுந்த ஒற்றைத்தலைமை போட்டியில் ஓ.பன்னீர் செல்வம் கிட்டத்தட்ட பின்தங்கிய கதைதான். அவர் வீசிய அஸ்திரங்கள் எல்லாம் அவரை நோக்கியே திரும்பி வந்ததால் அடுத்து என்ன செய்யலாம் என்ற மந்திர ஆலோசனையில் ஓ.பன்னீர் செல்வம் ஈடுபட்டுள்ளார். அதே நேரம் எடப்பாடி பழனிசாமி தன்னை நோக்கி வந்த இடையூறுகளையெல்லாம் தாண்டி அடுத்தடுத்த கட்டங்களை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறார்.

    ஜூலை 11-ந் தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் இடைக்கால பொதுச்செயலாளராக மகுடம் சூட்டப்பட்ட எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக அங்கீகாரம் பெறுவதற்கான தேர்தலை விரைவாக நடத்தி பொதுச்செயலாளர் ஆகிவிட வேண்டும் என்பதில் முனைப்புடன் இருக்கிறார்.

    ஏற்கனவே பொதுக்குழு உறுப்பினர்களில் 95 சதவீதத்துக்கும் மேற்பட்டவர்கள் தனக்கு ஆதரவு இருப்பதாக ஆதாரங்களுடன் தேர்தல் ஆணையத்திலும் மனுவை தாக்கல் செய்து விட்டார். அடுத்ததாக தேர்தலை நடத்துவதற்கு மாவட்ட வாரியாக பொதுக்குழு உறுப்பினர்களிடம் கையெழுத்து வாங்கும் நடைமுறையை தொடங்கி உள்ளார்.

    இப்போதைய நிலையில் ஐகோர்ட் தீர்ப்பின் அடிப்படையில் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளரை தேர்வு செய்வதற்கான தேர்தலை நடத்துவதற்கு எந்த தடையும் இல்லை. எனவே வாய்ப்பை சாதகமாக பயன்படுத்த திட்டமிட்டு உள்ளார். விரைவில் பொதுச்செயலாளர் தேர்தலை நடத்தி பொதுச்செயலாளராக தேர்வு பெற்று விட்டால் அதன்பிறகு யார் எப்படியெல்லாம் மோதுகிறார்கள் என்பதை பார்த்து விடுவோம் என்ற நிலைக்கு வந்து விட்டார் எடப்பாடி பழனிசாமி.

    அதிரடி காட்டும் எடப்பாடி பழனிசாமியின் வேகத்தை பார்த்து எடப்பாடின்னா சும்மாவா... என்று கெத்து காட்டுகிறார்கள் உடன்பிறப்புகள்...

    Next Story
    ×