என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
அரசுப் பணியில் சேர போலி நியமன கடிதங்களை வழங்கி வரும் நிறுவனங்கள்- வருமான வரித்துறை எச்சரிக்கை
- வருமான வரி அதிகாரி பணியிடமானது முற்றிலும் பதவி உயர்வால் நிரப்பப்படுகிறது.
- வருமான வரித்துறையில் வேலை வாங்கித் தருவதாக உறுதியளிக்கும் இடைத்தரகர்கள்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கான கூடுதல் வருமான வரி ஆணையர் வித்யாதர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
வருமான வரித்துறையில், வருமான வரி அதிகாரியின் பணியில் சேர்வதற்கான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் உள்ளிட்டவைகளுடன் கூடிய கடிதம், தமிழகத்தில் சிலருக்கு வழங்குவதாக வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் செய்திகள் பரப்பப்படுவதாக தெரிகிறது.
வருமான வரி அதிகாரி பணியிடமானது முற்றிலும் பதவி உயர்வால் நிரப்பப்படுகிறது. மேற்படி பதவிக்கு நேரடி ஆட்சேர்ப்பு இல்லை எனவும் இதன் மூலம் தெளிவுபடுத்தப்படுகிறது. மேலும், வருமான வரித்துறையில் உள்ள பல்வேறு அரசிதழ் அல்லாத பணிகளுக்கான ஆட்சேர்ப்பு, மத்திய பணியாளர் தேர்வாணையத்தால் மேற்கொள்ளப்படுகிறது.
வருமான வரித்துறையில் உள்ள 'குரூப் ஏ' பதவிகளுக்கான அதிகாரிகளை தேர்வு செய்வதற்கான செயல்முறை, யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் மூலம் மட்டுமே மேற்கொள்ளப்படுகிறது என்றும் தெளிவுபடுத்தப்படுகிறது.
ஆகவே, பொது மக்கள், பணியாளர் தேர்வாணையம், யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் ஆகியவற்றின் அதிகாரப்பூர்வ வலைத்தளங்களைப் பார்க்குமாறும், ஆட்சேர்ப்பு செயல்முறை குறித்து ஏதேனும் சந்தேகம் இருந்தால், சம்பந்தப்பட்ட அலுவலகங்களைத் தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
வருமான வரித்துறையில் வேலை வாங்கித் தருவதாக உறுதியளிக்கும் இடைத்தரகர்கள், நிறுவனம் அல்லது அமைப்புகளின் வலையிலும் விழ வேண்டாம்.
மேலும் மின் அஞ்சல் மூலமாகவோ அல்லது வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் மூலமாகவோ பெறப்படும் தவறான விளம்பரங்கள், கடிதங்கள் மூலமாகத் தெரிவிக்கப்படும் இதுபோன்ற போலியான செய்திகளுக்கு பொதுமக்கள் இறையாகி விட வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்