ஓ.பன்னீர்செல்வம் மாமியார் மரணம்- எடப்பாடி பழனிசாமி இரங்கல்

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மாமியார் மறைவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
தங்கம் விலை நிலவரம்

சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.88 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.34,760-க்கு விற்பனையாகிறது. கிராமுக்கு ரூ.11 அதிகரித்து ரூ.4,345 ஆக உள்ளது.
சேலத்தில் தி.மு.க.வுக்கு ஆதரவாக செயல்பட்டதால் வாலிபரை தாக்கி வீட்டை சூறையாடிய பா.ம.க.வினர்

சட்டசபை தேர்தலில் தி.மு.க.வுக்கு ஆதரவாக செயல்பட்டதால் ஆத்திரமடைந்த பா.ம.க.வினர் வாலிபரை தாக்கி வீட்டை சூறையாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாநகரில் வீடு,வீடாக காய்ச்சல் பரிசோதனை

திருப்பூர் மாநகர் பகுதியில் தினமும் 200 மற்றும் 300 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது 800 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
திருச்சி மத்திய மண்டலத்தில் 357 பேருக்கு புதிதாக தொற்று

கொரோனா தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் தஞ்சை மற்றும் திருச்சியில் தினசரி பாதிப்பு 100-ஐ கடந்து பொதுமக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
திருச்சி அரசு மருத்துவமனையில் மீண்டும் பயன்பாட்டுக்கு வந்த கொரோனா சிறப்பு வார்டுகள்

கொரோனா தொற்று பரவல் காரணமாக திருச்சி மாநகராட்சி பகுதிகளில் 18 ஆரம்ப சுகாதார நிலையங்களில் தினமும் தலா 50 பேர் வீதம் ஆயிரம் பேருக்கு காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
மேட்டூர் அணை நீர்மட்டம் 98.61 அடியாக சரிந்தது

மேட்டூர் அணைக்கு நீர்வரத்தை விட, அதிகமாக தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் படிப்படியாக சரிந்து வருகிறது.
நூல் விலை மேலும் உயர்வால் திருப்பூர் பின்னலாடை உற்பத்தியாளர்கள் பாதிப்பு

நூல் விலை உயர்வை கண்டித்து மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மீண்டும் போராட்டம் நடத்த திருப்பூர் பின்னலாடை உற்பத்தியாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.
ரவீந்திரநாத் எம்.பியின் கார் மீது தாக்குதல்- அ.ம.மு.க நிர்வாகி கைது

தேனி அருகே ரவீந்திரநாத் எம்.பியின் கார் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்திய அ.ம.மு.க நிர்வாகியை போலீசார் கைது செய்து மேலும் சிலரை தேடி வருகின்றனர்.
சென்னை ஐகோர்ட்டு நீதிபதி மகன்-டிரைவர் உள்பட 8 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை ஐகோர்ட்டு நீதிபதி எஸ்.வைத்தியநாதனின் மகன், சகோதரி உள்ளிட்ட 8 பேர் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
சேலத்தில் மீண்டும் அதிகரிக்கும் தொற்று- ஒரே நாளில் மேலும் 90 பேருக்கு கொரோனா

கொரோனா தொற்றில் இருந்து பாதுகாக்க அனைவரும் முக கவசம் அணிய வேண்டும் என சுகாதார துறை அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
10 நாட்களில் முட்டை விலை மேலும் 55 காசுகள் உயர்வு

வெயிலின் தாக்கத்தால் நாமக்கல் மண்டலத்தில் முட்டை உற்பத்தி குறைந்துள்ளது. இதனால் விலை உயர்ந்து வருகிறது.
அரியலூர் அருகே வாக்குப்பதிவு நாளிலும் உழவுப்பணியில் ஈடுபட்ட விவசாயிகள்

மணகெதி கிராமத்தில் நேற்று விவசாயிகள் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் தங்கள் நிலங்களில் மாடுகளை கொண்டு உழவு பணிகளை செய்தனர்.
சிதம்பரம் உள்பட 3 தொகுதி வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு 7 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு

வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டிருக்கும் சி.முட்லூர் கருமாரி அம்மன் அரசு கலைகல்லூரிக்கு துப்பாக்கி ஏந்திய 7 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மு.க.தமிழரசு-சகாயத்துக்கு கொரோனா: ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் மகனும், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினின் சகோதரருமான மு.க.தமிழரசு கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தங்கம் விலை சவரனுக்கு ரூ.312 உயர்வு

சென்னையில் இன்று காலை தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.312 உயர்ந்து, ரூ.34 ஆயிரத்து 376-க்கு விற்றது. கிராமுக்கு ரூ.39 அதிகரித்து ரூ.4 ஆயிரத்து 297 ஆக உள்ளது.
செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த தொழிலாளி

சாத்தான்குளம் அருகே மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் செல்போன் கோபுரத்தில் ஏறி தொழிலாளி தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
கணவருடன் தகராறு- குழந்தையை கொன்று தாய் தற்கொலை முயற்சி

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கணவருடன் ஏற்பட்ட தகராறில் குழந்தையை கொன்று தாய் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆம்புலன்சில் வந்து ஓட்டு போட்ட 86 வயது மூதாட்டி

தள்ளாத வயதிலும் தனது ஜனநாயக கடமையை ஆற்றிய மூதாட்டி ராஜா மணி அம்மாளை தேர்தல் அலுவலர்கள் பாராட்டினர்.
கள்ளக்குறிச்சி அருகே முன்னாள் அ.தி.மு.க. அமைச்சருக்கு கொரோனா

கள்ளக்குறிச்சி அருகே வடக்கனந்தல் பகுதியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் மோகனுக்கு தற்போது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா நோயாளிகள் 3 பேர் பலி?

சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் ஆக்சிஜன் செல்வதில் பிரச்சனை ஏற்பட்டதாகவும், இதன் காரணமாக சிகிச்சை பெற்று வந்த கொரோனா நோயாளிகள் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.