என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
X
முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் சீராக உயர்வு
Byமாலை மலர்22 May 2022 4:11 AM GMT (Updated: 22 May 2022 4:11 AM GMT)
வைகை அணையின் நீர்மட்டம் 66.98 அடியாக உள்ளது. 11 கன அடி நீர் வருகிற நிலையில் மதுரை மாநகர குடிநீருக்காக 72 கன அடி நீர் திறக்கப்படுகிறது.
கூடலூர்:
கோடை மழை கைகொடுத்த நிலையில் முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் சீராக உயர்ந்து வருகிறது. நேற்று 777 கன அடி நீர் வந்தது. இன்று காலை நீர்வரத்து மேலும் அதிகரித்து 1319 கன அடி நீர் வருகிறது.
அணையில் இருந்து தேனி மாவட்ட குடிநீருக்காக 100 கன அடி நீர் திறக்கப்படுகிறது. வழக்கமாக பாசனத்துக்கு ஜூன் மாதம் முதல் வாரத்தில் தண்ணீர் திறக்கப்படும். தற்போது மழை அவ்வப்போது பெய்து வருகிறது. மேலும் நீர்மட்டமும் சீராக உயர்ந்து வருவதால் திட்டமிட்டபடி முதல் போக நெல் சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படும் என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர். இதனால் நிலங்களை உழுது பண்படுத்தி வருகின்றனர்.
மேலும் நாற்றங்கால் அமைக்கும் பணியையும் தொடங்கியுள்ளனர். அணையின் நீர் மட்டம் 131.35 அடியாக உள்ளது.
வைகை அணையின் நீர்மட்டம் 66.98 அடியாக உள்ளது. 11 கன அடி நீர் வருகிற நிலையில் மதுரை மாநகர குடிநீருக்காக 72 கன அடி நீர் திறக்கப்படுகிறது. 5 மாவட்ட விவசாய நிலங்கள் வைகை அணை மூலம் பாசன வசதி பெறுகிறது. மழை தொடரும் பட்சத்தில் பாசனத்துக்காக கூடுதல் தண்ணீர் விரைவில் திறக்கப்பட வாய்ப்பு உள்ளது.
மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 38.40 அடியாக உள்ளது. 7 கன அடி நீர் வருகிறது. திறப்பு இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர் மட்டம் 99.87 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது. பெரியாறு 2.3, தேக்கடி 4.4, மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.
கோடை மழை கைகொடுத்த நிலையில் முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் சீராக உயர்ந்து வருகிறது. நேற்று 777 கன அடி நீர் வந்தது. இன்று காலை நீர்வரத்து மேலும் அதிகரித்து 1319 கன அடி நீர் வருகிறது.
அணையில் இருந்து தேனி மாவட்ட குடிநீருக்காக 100 கன அடி நீர் திறக்கப்படுகிறது. வழக்கமாக பாசனத்துக்கு ஜூன் மாதம் முதல் வாரத்தில் தண்ணீர் திறக்கப்படும். தற்போது மழை அவ்வப்போது பெய்து வருகிறது. மேலும் நீர்மட்டமும் சீராக உயர்ந்து வருவதால் திட்டமிட்டபடி முதல் போக நெல் சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படும் என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர். இதனால் நிலங்களை உழுது பண்படுத்தி வருகின்றனர்.
மேலும் நாற்றங்கால் அமைக்கும் பணியையும் தொடங்கியுள்ளனர். அணையின் நீர் மட்டம் 131.35 அடியாக உள்ளது.
வைகை அணையின் நீர்மட்டம் 66.98 அடியாக உள்ளது. 11 கன அடி நீர் வருகிற நிலையில் மதுரை மாநகர குடிநீருக்காக 72 கன அடி நீர் திறக்கப்படுகிறது. 5 மாவட்ட விவசாய நிலங்கள் வைகை அணை மூலம் பாசன வசதி பெறுகிறது. மழை தொடரும் பட்சத்தில் பாசனத்துக்காக கூடுதல் தண்ணீர் விரைவில் திறக்கப்பட வாய்ப்பு உள்ளது.
மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 38.40 அடியாக உள்ளது. 7 கன அடி நீர் வருகிறது. திறப்பு இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர் மட்டம் 99.87 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது. பெரியாறு 2.3, தேக்கடி 4.4, மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X