search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ராஜீவ் ஜோதி யாத்திரையை விஜய் வசந்த் எம்.பி.  துவக்கி வைத்தபோது எடுத்த படம்
    X
    ராஜீவ் ஜோதி யாத்திரையை விஜய் வசந்த் எம்.பி. துவக்கி வைத்தபோது எடுத்த படம்

    ராஜீவ் ஜோதி யாத்திரையை துவக்கி வைத்த விஜய் வசந்த் எம்.பி.

    பேரணியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட காங்கிரஸ் தொண்டர்கள் இருசக்கர வாகனத்தில் ராஜீவ்காந்தி நினைவு ஜோதியை கையில் ஏந்தி புறப்பட்டனர்.

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை திருவொற்றியூரில் இருந்து புறப்பட்ட ராஜீவ் ஜோதி யாத்திரையை விஜய் வசந்த் எம்.பி.  துவக்கி வைத்தார்.

    வடசென்னை மாவட்ட தலைவர் எம்.எஸ்.திரவியம் தலைமையில் தொடங்கிய இந்த ஜோதி யாத்திரை துவக்க விழாவில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச்செயலாளர் சிரஞ்சீவி, மாவட்ட பொறுப்பாளர் கமலிகா காமராஜ் மற்றும் முருகானந்தம், மாமன்ற உறுப்பினர் கீர்த்தி, வட சென்னை வர்த்தக காங்கிரஸ் தலைவர் ராகேஷ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    இந்தப் பேரணியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட காங்கிரஸ் தொண்டர்கள் இருசக்கர வாகனத்தில் ராஜீவ்காந்தி நினைவு ஜோதியை கையில் ஏந்தி புறப்பட்டனர். இந்த ஜோதியானது திருவெற்றியூர் தேரடியில் தொடங்கி ராயபுரம், ஆர்கே நகர், டி நகர் சைதாப்பேட்டை, போரூர், பூந்தமல்லி வழியாக நாளை காலை ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ் காந்தி நினைவிடத்தில் சென்றடையும். அங்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரியிடம் ஜோதி ஒப்படைக்கப்படும்.

    அதன்பின்பு அந்த ஜோதியானது நாளை ஸ்ரீபெரும்புதூரில் இருந்து புறப்பட்டு இந்தியா முழுவதும் பாரத யாத்திரையாக சென்று தலைவர் ராகுல் காந்தியிடம் ஒப்படைக்கப்படும். 
    Next Story
    ×