search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மெயின் அருவியில் தண்ணீர் சீறிபாய்ந்து செல்வதை படத்தில் காணலாம்.
    X
    மெயின் அருவியில் தண்ணீர் சீறிபாய்ந்து செல்வதை படத்தில் காணலாம்.

    ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளபெருக்கு- அருவியில் குளிக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது

    காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி மாவட்ட கலெக்டர் திவ்யதர்சினி ஒகேனக்கல் அருவிகளில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை விதித்தார்.
    பென்னாகரம்:

    தமிழக, கர்நாடகா காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக ஒகேனக்கல்லில் நீர் வரத்து வினாடிக்கு 25 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.

    தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் சில நாட்களாக பரவலாக கோடை மழை பெய்து வருகிறது. இதனால் ஒகேனக்கல் நீர்வரத்து அதிகரித்தும், குறைந்தும் காணப்படுகிறது.

    இதனிடையே தமிழக நீர்பிடிப்பு பகுதிகளான அஞ்செட்டி, பிலிகுண்டு,ராசிமணல், கேரட்டி, நாட்றாம்பாளையம், ஓசூர் மற்றும் கர்நாடக காவிரி நீர்பிடிப்பு உள்ளிட்ட பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது.

    இதன் காரணமாக ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரித்தது. நேற்று ஒகேனக்கலுக்கு வினாடிக்கு 7,500 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.

    இந்த நிலையில் இன்று காலை ஒகேனக்கலுக்கு வினாடிக்கு 25 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது.

    இதனால் மெயின் அருவி, சினி பால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் கொட்டியது. மேலும் காவிரி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

    காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி மாவட்ட கலெக்டர் திவ்யதர்சினி ஒகேனக்கல் அருவிகளில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை விதித்தார்.

    தமிழக-கர்நாடக மாநில எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் காவிரி ஆற்றில் வரும் நீர்வரத்து அளந்து கண்காணித்து வருகின்றனர்.

    Next Story
    ×