search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கன்னியாகுமரியில் கடல் உள்வாங்கியது
    X
    கன்னியாகுமரியில் கடல் உள்வாங்கியது

    கன்னியாகுமரியில் கடல் உள்வாங்கியது- தாமதமாக தொடங்கிய படகு போக்குவரத்து

    கன்னியாகுமரியில் கடல் நீர்மட்டம் தாழ்ந்து உள்வாங்கி காணப்பட்டதால் விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து 1½ மணி நேரம் தாமதமாக தொடங்கியது.
    கன்னியாகுமரி:

    கடந்த 2004ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ந் தேதி ஏற்பட்ட சுனாமி என்னும் ஆழிப்பேரலைக்கு பிறகு கன்னியாகுமரி கடலில் அடிக்கடி மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. அமாவாசை மற்றும் பவுர்ணமி போன்ற முக்கியமான நாட்களில் கன்னியாகுமரி கடலில் இந்த இயற்கை மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது.

    கடல் சீற்றம், கடல் கொந்தளிப்பு, கடல் உள்வாங்குவது, கடல் நீர் மட்டம் தாழ்வது, கடல் நீர் மட்டம் உயர்வது, கடல் நிறம் மாறுவது, கடல் அலையே இல்லாமல் அமைதியாக குளம் போல் காட்சி அளிப்பது, போன்ற பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. இந்த நிலையில் பவுர்ணமி, அமாவாசை அல்லாத மற்ற நாட்களிலும் கன்னியாகுமரி கடலில் மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது. அந்த அடிப்படையில் கன்னியாகுமரியில் இன்று காலையிலும் கடல் திடீர் என்று உள்வாங்கி காணப்பட்டது. சுமார் 50 அடி தூரத்துக்கு கடல் உள்வாங்கி இருந்தது. இதனால் கடலுக்கு அடியில் இருந்த பாறைகள் மற்றும் மணல் திட்டுகள் வெளியே தெரிந்தன.

    குறிப்பாக கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரை பகுதி மணல் பரப்பாக காட்சியளித்தது. இதைக்கண்டு இன்று அதிகாலை சூரியன் உதயமாகும் காட்சியை காண கடற்கரைக்கு வந்த சுற்றுலா பயணிகள் அச்சம் அடைந்தனர். ஆனால் எந்தவித அச்சமுமின்றி மீனவர்கள் வழக்கம்போல் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று விட்டு கரைக்கு திரும்பினர்.

    கன்னியாகுமரியில் கடல் நீர்மட்டம் தாழ்ந்து உள்வாங்கி காணப்பட்டதால் கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு இன்று காலை 8 மணிக்கு நடக்க வேண்டிய படகு போக்குவரத்து 1½ மணி நேரம் தாமதமாக கடல் சீரானதுக்கு பிறகு காலை 9.30 மணிக்கு படகு போக்குவரத்து தொடங்கியது.

    Next Story
    ×