என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
தேனி மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களுக்கு உணவு வழங்கியதில் மாபெரும் முறைகேடு
தேனி:
தேனி பொதுசுகாதாரத்துறையில் வாகன பயன்பாடு, நிதிமுறைகேடு குறித்து இணை இயக்குநர் மதுசூதனன் தலைமையில் கடந்த பிப்ரவரி 3ந்தேதி விசாரணை நடந்தது. இதில் துணைஇயக்குநர், உதவி இயக்குநர், 8 வட்டார மருத்துவ அலுவலர்கள், டிரைவர்கள், ஆய்வாளர்கள் என 25 பேரிடம் விசாரணை நடைபெற்றது. அதன் அறிக்கை சுகாதாரத்துறை இயக்குனரிடம் தாக்கல் செய்யப்பட்டது. அதன்பின் உதவி இயக்குனர் சாமி, முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் குறித்து லஞ்சஒழிப்புத்துறையில் புகார் அளிக்க வேண்டும் என இயக்குநருக்கு கோரிக்கை விடுத்தார்.
ஆனால் அவரது கோரிக்கைக்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனையடுத்து நிதிமுறைகேடு குறித்த விரிவான அறிக்கையை லஞ்ச ஒழிப்புத்துறையினருக்கு சமர்பித்த உதவி இயக்குநர் விசாரணை நடத்த வலியுறுத்தினார்.
இதனையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனரகம் சார்பில் ஏன் முழுமையான விசாரணை நடத்தவில்லை என பொதுசுகாதாரத் துறையினரிடம் கேள்வி எழுப்பினர். மேலும் தேனி பொதுசுகாதாரத்துறை அலுவலகத்தில் இணை இயக்குநர் தலைமையில் விசாரணை நடைபெற்றது. முன்னாள் துணை இயக்குனர் ரமேஷ்குமார், உதவி திட்ட மேலாளர் மனோஜ்குமார், உதவியாளர் ரவி, பத்மபாண்டி, பாண்டி, ஆகியோரிடம் விசாரணை நடைபெற்றது.
இந்த விசாரணையில் கொரோனா கால கட்டத்தில் உபகரணங்கள், மருந்து மாத்திரைகள் வாங்க பொதுசுகாதாரத்துறைக்கு அரசு ஒதுக்கிய நிதியில் ரூ.65 லட்சம் முறைகேடு செய்யப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து மாவட்ட கலெக்டர் முரளிதரன் விசாரணை நடத்த உத்தரவிட்டார்.
அதில் சிறப்பு முகாம்களில் சிகிச்சை பெற்றோர், டாக்டர்கள், முன்களப்பணியாளர்களுக்கு உணவு வழங்கியதிலும் முறைகேடு நடந்தது தெரியவந்தது. 10 பேருக்கு உணவு கொடுத்துவிட்டு 100 பேருக்கு வழங்கியதாக கணக்குஎழுதியுள்ளனர். இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டபின் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது லஞ்சஒழிப்புத்துறை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்த உள்ளனர்.
இதில் எந்தெந்த அதிகாரிகள், அலுவலர்கள் சிக்குவார்கள் என பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்