என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
X
கோடை வெயிலால் குற்றாலம் மெயின் அருவி வறண்டது- சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
Byமாலை மலர்9 May 2022 5:48 AM GMT (Updated: 9 May 2022 5:48 AM GMT)
பழைய குற்றாலம், ஐந்தருவியில் மிக மிக குறைவாகவே விழும் தண்ணீரில் சுற்றுலா பயணிகள் குளித்து செல்கின்றனர்.
தென்காசி:
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன் மாதம் சீசன் தொடங்கும். அதனை தொடர்ந்து செப்டம்பர் மாதம் வரையிலும் சீசன் நீடிக்கும்.
இந்த காலகட்டங்களில் அருவிகளில் விழும் தண்ணீரில் குளித்து மகிழவும், குற்றாலத்தில் நிலவும் இதமான குளுகுளு காலநிலையை அனுபவிக்கவும் வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருவார்கள்.
தற்போது கோடை காலம் என்பதால் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் மெயினருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் வரத்து நின்றுவிட்டது. குறிப்பாக குற்றாலம் மெயின் அருவி, சிற்றருவி, புலியருவி ஆகியவை வறண்டு விட்டன.
இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். அவர்கள் பழைய குற்றாலம், ஐந்தருவியில் மிக மிக குறைவாகவே விழும் தண்ணீரில் குளித்து செல்கின்றனர். இதனால் மெயின் அருவிக்கரைகள் சுற்றுலா பயணிகள் வரத்து இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.
கடந்த சில ஆண்டுகளாக கோடைக்காலத்தில் அதுவும் அக்னி நட்சத்திரம் காலத்தில் மழை பெய்ததால் குற்றால அருவிகளில் தண்ணீர் விழுந்தது. ஆனால் இந்த ஆண்டு அக்னி நட்சத்திரம் தொடங்கி மழை இல்லாததால் அருவிகள் தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுகின்றன.
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன் மாதம் சீசன் தொடங்கும். அதனை தொடர்ந்து செப்டம்பர் மாதம் வரையிலும் சீசன் நீடிக்கும்.
இந்த காலகட்டங்களில் அருவிகளில் விழும் தண்ணீரில் குளித்து மகிழவும், குற்றாலத்தில் நிலவும் இதமான குளுகுளு காலநிலையை அனுபவிக்கவும் வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருவார்கள்.
தற்போது கோடை காலம் என்பதால் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் மெயினருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் வரத்து நின்றுவிட்டது. குறிப்பாக குற்றாலம் மெயின் அருவி, சிற்றருவி, புலியருவி ஆகியவை வறண்டு விட்டன.
இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். அவர்கள் பழைய குற்றாலம், ஐந்தருவியில் மிக மிக குறைவாகவே விழும் தண்ணீரில் குளித்து செல்கின்றனர். இதனால் மெயின் அருவிக்கரைகள் சுற்றுலா பயணிகள் வரத்து இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.
கடந்த சில ஆண்டுகளாக கோடைக்காலத்தில் அதுவும் அக்னி நட்சத்திரம் காலத்தில் மழை பெய்ததால் குற்றால அருவிகளில் தண்ணீர் விழுந்தது. ஆனால் இந்த ஆண்டு அக்னி நட்சத்திரம் தொடங்கி மழை இல்லாததால் அருவிகள் தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுகின்றன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X