search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மேட்டூர் அணை
    X
    மேட்டூர் அணை

    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 5 ஆயிரத்து 45 கன அடியாக சரிவு

    மேட்டூர் அணை நீர்மட்டம் தற்போது 107 அடியை நெருங்கி உள்ள நிலையில் அணைக்கு நீர்வரத்தும் 5 ஆயிரம் கன அடிக்கும் அதிகமாக உள்ளது.
    மேட்டூர்:

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மீண்டும் சரிய தொடங்கி உள்ளது.

    மேட்டூர் அணைக்கு நேற்று வினாடிக்கு 6 ஆயிரத்து 318 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் சரிந்து வினாடிக்கு 5 ஆயிரத்து 45 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து காவிரியில் 1500 கன அடி தண்ணீர் குடிநீருக்காக திறந்து விடப்பட்டுள்ளது.

    அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

    நேற்று 106.66 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று மேலும் உயர்ந்து 106.86 அடியானது. இனி வரும் நாட்களில் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரிக்கும் பட்சத்தில் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்புள்ளது.

    மேட்டூர் அணை நீர்மட்டம் தற்போது 107 அடியை நெருங்கி உள்ள நிலையில் அணைக்கு நீர்வரத்தும் 5 ஆயிரம் கன அடிக்கும் அதிகமாக உள்ளது. இதனால் மேட்டூர் அணை காவிரி டெல்டா பாசனத்திற்காக வழக்கமாக திறக்கப்படும் ஜூன் 12ந் தேதி இந்தாண்டும் திறக்க வாய்ப்புள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் காவிரி டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    Next Story
    ×