என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
X
உசிலம்பட்டி அருகே அம்மன் கோவில் திருவிழாவில் 500 காளைகள் பங்கேற்ற ஜல்லிக்கட்டு
Byமாலை மலர்7 May 2022 6:25 AM GMT (Updated: 7 May 2022 6:41 AM GMT)
உசிலம்பட்டி அருகே அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு தமிழக பாரம்பரிய போட்டிகளில் ஒன்றான ஜல்லிக்கட்டு போட்டிக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இன்று காலை ஜல்லிக்கட்டு போட்டி கோலாகலமாக நடைபெற்றது.
உசிலம்பட்டி:
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை அடுத்த எழுமலை பகுதியில் கட்டை காளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் சித்திரை திருவிழா பிரசித்தி பெற்றது ஆகும். இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கி நடைபெற்று வருகிறது.
திருவிழாவை முன்னிட்டு தமிழக பாரம்பரிய போட்டிகளில் ஒன்றான ஜல்லிக்கட்டு போட்டிக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இன்று காலை ஜல்லிக்கட்டு போட்டி கோலாகலமாக நடைபெற்றது.
இதில் 500 ஜல்லிக்கட்டு காளைகள் கலந்து கொண்டன. 250 மாடுபிடி வீரர்கள் பங்கேற்று காளைகளை வீரமுடன் எதிர்கொண்டு வெற்றி பெற்றனர்.
சிலர் மூர்க்கமான காளைகளின் ஆவேச தாக்குதலை தாக்குப்பிடிக்க முடியாமல் திணறினர். சிலர் காயமடைந்தனர். அவர்களுக்கு சம்பவ இடத்தில் முகாமிட்டு இருந்த மருத்துவ குழுவினர் உடனடியாக சிகிச்சை அளித்தனர்.
இந்த வீரவிளையாட்டை காண சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டனர். அந்த பகுதியில் அமைக்கப்பட்டிருந்த திருவிழா சிறப்பு கடைகளில் வியாபாரம் களை கட்டியது.
அக்னி வெயிலையும் பொருட்படுத்தாமல் போட்டிகள் உற்சாகமாக நடைபெற்றது. இந்த போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை அடுத்த எழுமலை பகுதியில் கட்டை காளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் சித்திரை திருவிழா பிரசித்தி பெற்றது ஆகும். இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கி நடைபெற்று வருகிறது.
திருவிழாவை முன்னிட்டு தமிழக பாரம்பரிய போட்டிகளில் ஒன்றான ஜல்லிக்கட்டு போட்டிக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இன்று காலை ஜல்லிக்கட்டு போட்டி கோலாகலமாக நடைபெற்றது.
இதில் 500 ஜல்லிக்கட்டு காளைகள் கலந்து கொண்டன. 250 மாடுபிடி வீரர்கள் பங்கேற்று காளைகளை வீரமுடன் எதிர்கொண்டு வெற்றி பெற்றனர்.
சிலர் மூர்க்கமான காளைகளின் ஆவேச தாக்குதலை தாக்குப்பிடிக்க முடியாமல் திணறினர். சிலர் காயமடைந்தனர். அவர்களுக்கு சம்பவ இடத்தில் முகாமிட்டு இருந்த மருத்துவ குழுவினர் உடனடியாக சிகிச்சை அளித்தனர்.
இந்த வீரவிளையாட்டை காண சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டனர். அந்த பகுதியில் அமைக்கப்பட்டிருந்த திருவிழா சிறப்பு கடைகளில் வியாபாரம் களை கட்டியது.
அக்னி வெயிலையும் பொருட்படுத்தாமல் போட்டிகள் உற்சாகமாக நடைபெற்றது. இந்த போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X