search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கைதான ஓம்சக்தி-கவிதா.
    X
    கைதான ஓம்சக்தி-கவிதா.

    வாயில் துணியை திணித்து பிளஸ்-1 மாணவி பாலியல் பலாத்காரம்: டெம்போ டிரைவர் கைது

    உறவினர் வீட்டிற்கு சென்ற பிளஸ்-1 மாணவி பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    தருமபுரி:

    தருமபுரி கலெக்டர் அலுவலகம் அருகே டி.என்.எச்.பி. குடியுருப்பு பகுதியில் ஆம்புலன்ஸ் டிரைவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

    இவருக்கு 2 மனைவிகள் உள்ளனர். இதில் முதல் மனைவிக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளன. அதில் 16 வயது மூத்த மகள் தருமபுரி அரசு பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார்.

    இந்த நிலையில் பிளஸ்-1 மாணவி தற்போது குள்ளனூரில் உள்ள தனது அத்தை கவிதா (வயது40) என்பவர் வீட்டில் இருந்து பள்ளிக்கு சென்று வருகிறார். இவரது கணவர் டெம்போ டிரைவர் ஓம்சக்தி.

    இதையடுத்து கடந்த 11-ந்தேதி அன்று பள்ளியில் இருந்து மாணவி வீட்டிற்கு வந்தார். அப்போது கவிதா அந்த மாணவியிடம் உன்னை மாமா கூப்பிடுகிறார் என்று அழைத்து செல்கிறார்.

    அங்கு மாணவியிடம் கவிதா உன் மீது மாமா ஆசைப்படுகிறார். அதனால் நீ அவர் சொல்வதை எல்லாம் கேள். அப்படி இல்லை என்றால் உங்க அம்மாவை கொலை செய்து விடுவார் என்று கூறியுள்ளதாக தெரிகிறது. இதற்கு அந்த மாணவி மறுப்பு தெரிவித்துள்ளார்.

    ஆனால் வலுக்கட்டாயமாக மாணவியை இழுத்து சென்று படுக்கை அறைக்கு தூக்கி சென்றுள்ளார். அங்கு வாயில் துணியை வைத்து அடைத்து மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதனையும் மீறி நீ உன் பெற்றோரிடம் கூறினால் உன்னையும் கொலை செய்து விடுவோம் என்று கூறியதாக கூறப்படுகிறது.

    இதனால் நடந்த சம்பவத்தை எல்லாம் மறந்து அந்த வீட்டை விட்டு தனது தந்தை வீட்டிற்கு நேற்று வந்தார். அங்கு தனது தந்தையிடம் நடந்த சம்பவத்தை எடுத்து கூறினார். இதனால் அவர் அதிர்ச்சி அடைந்தார். உறவினர் தனது மகளை பத்திரமாக பார்த்து கொள்வார்கள் என்று அனுப்பி வைத்தால் இப்படி செய்து விட்டார்களே என புலம்பி கதறி அழுதார்.

    இது குறித்து மாணவியின் பெற்றோர் தருமபுரி அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து ஓம் சக்தி, கவிதா ஆகிய 2 பேரையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    உறவினர் வீட்டிற்கு சென்ற பிளஸ்-1 மாணவி பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    Next Story
    ×