search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    திண்டுக்கல்லில் ம.தி.மு.க. மாவட்ட செயற்குழுக் கூட்டத்தில் துரை வைகோ பேசிய காட்சி
    X
    திண்டுக்கல்லில் ம.தி.மு.க. மாவட்ட செயற்குழுக் கூட்டத்தில் துரை வைகோ பேசிய காட்சி

    இலங்கைக்கு நிதி அளிக்கும் நிலையில் கச்சத்தீவை மீட்கும் முயற்சியில் இந்திய அரசு ஈடுபட வேண்டும்- துரை வைகோ பேட்டி

    பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வு தொடர்ந்து விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து வருகிறது. மத்திய அரசு மக்களின் மன நிலையை உணராமல் தொடர்ந்து எரிபொருள் விலையை உயர்த்தி வருகிறது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்ட ம.தி.மு.க. நிர்வாகிகள் செயற்குழு கூட்டம் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட செயலாளர் செல்வராகவன் தலைமை வகித்தார். அரசியல் ஆலோசனைக் குழு உறுப்பினர் ராமசாமி, மாவட்ட பொருளாளர் சுதர்சன், துணைச் செயலாளர் பழனிச்சாமி உள்பட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ சிறப்புரையாற்றினார். அதன் பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வு தொடர்ந்து விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து வருகிறது. மத்திய அரசு மக்களின் மன நிலையை உணராமல் தொடர்ந்து எரிபொருள் விலையை உயர்த்தி வருகிறது.

    இதனால் உணவு, மருந்து, கட்டுமானப் பொருள், ஆடைகள் என அனைத்து பொருட்களும் விலையேற்றம் அடையும். கொரோனா தாக்குதலில் இருந்து விடுபட்டு மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வரும் நிலையில் மத்திய அரசின் இந்த விலையேற்ற அறிவிப்பு அவர்களின் நலனை எண்ணிப்பார்க்காமல் உள்ளதோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

    இந்த விலை உயர்வை குறைக்காவிட்டால் ம.தி.மு.க. சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். இன்னும் 2 வருடங்களில் நாடாளுமன்ற தேர்தல் வர உள்ளது. பா.ஜ.கவை எதிர்த்து வலுவான எதிர்கட்சிகள் கூட்டணி அமைக்க வேண்டும் என அனைவரின் மனதிலும் தோன்றியுள்ளது. டெல்லியில் நடந்த தி.மு.க. கட்சி அலுவலக திறப்பு விழாவில் பல்வேறு கட்சி தலைவர்கள் கலந்து கொண்டது இதற்கான அடித்தளம் ஆகும்.

    இலங்கையில் நெருக்கடியான நிலை ஏற்பட்டுள்ளது. மத்திய அரசு ஒரு மில்லியன் அளவுக்கு நிதி வழங்கியுள்ளது. இதில் தவறு கிடையாது. ஆனால் இலங்கையில் வாழக்கூடிய தமிழர்கள் கடந்த 40 நாட்களாக சந்தித்து வரும் பிரச்சினைகள், கச்சத்தீவு பிரச்சினை, ராமேஸ்வரத்தில் இருந்து கடலில் மீன் பிடிக்க செல்லும் மீனவர்களை இலங்கை ராணுவம் கைது செய்தது போன்ற பிரச்சினைகளை நிதி வழங்கும் போது பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும். இது மத்திய அரசின் முக்கிய கடமையாகும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×