என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
X
பேரறிவாளனுக்கு 8-வது முறையாக மேலும் 30 நாட்கள் பரோல் நீட்டிப்பு
Byமாலை மலர்22 Feb 2022 2:05 AM GMT (Updated: 22 Feb 2022 2:05 AM GMT)
பேரறிவாளனின் உடல்நிலையை கருத்தில்கொண்டு 8-வது முறையாக மேலும் 30 நாட்கள் பரோல் வழங்கி தமிழக அரசு நேற்று உத்தரவிட்டுள்ளது.
திருப்பத்தூர் :
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை சேர்ந்த பேரறிவாளனுக்கு (வயது 51) ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டு 30 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வருகிறார்.
சிறுநீரக நோய் தொற்று காரணமாக அவருக்கு கடந்த ஆண்டு மே மாதம் தமிழக அரசு 30 நாட்கள் பரோல் வழங்கியது. தொடர்ந்து ஒவ்வொரு முறையும் பரோல் முடியும்போது 30 நாட்கள் பரோல் நீட்டிக்கப்பட்டு வந்தது.
நேற்றுடன் பரோல் முடிந்து சென்னை புழல் சிறைக்கு போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து செல்ல இருந்த நிலையில் அவரது உடல்நிலையை கருத்தில்கொண்டு 8-வது முறையாக பேரறிவாளனுக்கு மேலும் 30 நாட்கள் பரோல் வழங்கி தமிழக அரசு நேற்று உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை சேர்ந்த பேரறிவாளனுக்கு (வயது 51) ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டு 30 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வருகிறார்.
சிறுநீரக நோய் தொற்று காரணமாக அவருக்கு கடந்த ஆண்டு மே மாதம் தமிழக அரசு 30 நாட்கள் பரோல் வழங்கியது. தொடர்ந்து ஒவ்வொரு முறையும் பரோல் முடியும்போது 30 நாட்கள் பரோல் நீட்டிக்கப்பட்டு வந்தது.
நேற்றுடன் பரோல் முடிந்து சென்னை புழல் சிறைக்கு போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து செல்ல இருந்த நிலையில் அவரது உடல்நிலையை கருத்தில்கொண்டு 8-வது முறையாக பேரறிவாளனுக்கு மேலும் 30 நாட்கள் பரோல் வழங்கி தமிழக அரசு நேற்று உத்தரவிட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X