என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
X
மலைப்பகுதியில் பெய்த மழை: குற்றாலம் அருவிகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
Byமாலை மலர்28 Jan 2022 7:02 AM GMT (Updated: 28 Jan 2022 7:06 AM GMT)
கடந்த சில நாட்களாக மாலை வேளையில் மலைப்பகுதியில் மழை பெய்ததால் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் இன்று தண்ணீர் வரத்து சற்று அதிகரித்து காணப்பட்டது.
தென்காசி:
தென்காசி மாவட்டத்தில் பெய்த தொடர் மழை காரணமாக இந்த ஆண்டு சீசன்காலத்தை தாண்டியும் தண்ணீர் விழுந்து வந்தது. ஆனால் கடந்த மாதம் மழை இல்லாததால் குற்றாலத்தில் கடந்த பல நாட்களாக வெப்பத்தினால் தண்ணீர் இன்றி அருவிகள் வறண்டு காணப்பட்டன.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக மாலை வேளையில் மலைப்பகுதியில் மழை பெய்ததால் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் இன்று தண்ணீர் வரத்து சற்று அதிகரித்து காணப்பட்டது. இதனால் இன்று குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. அவர்கள் கொரோனா வழிகாட்டு முறைகளை கடைபிடித்து வரிசையில் நின்று குளித்து சென்றனர்.
இதேபோல் நெல்லை மாவட்டத்திலும் ஆங்காங்கே நேற்று இரவு மழை பெய்தது. மணிமுத்தாறு அணைப்பகுதியில் 2.4 மில்லிமீட்டர் மழை பதிவானது. 143 அடி உச்சநீர்மட்டம் கொண்ட பிரதான அணையான பாபநாசத்தின் இன்றைய நீர்மட்டம்121.40அடியாகவும், சேர்வலாறு நீர்மட்டம் 123.95 அடியாகவும், மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 113.80 அடியாகவும், உள்ளது.
தென்காசி மாவட்டத்தில் பெய்த தொடர் மழை காரணமாக இந்த ஆண்டு சீசன்காலத்தை தாண்டியும் தண்ணீர் விழுந்து வந்தது. ஆனால் கடந்த மாதம் மழை இல்லாததால் குற்றாலத்தில் கடந்த பல நாட்களாக வெப்பத்தினால் தண்ணீர் இன்றி அருவிகள் வறண்டு காணப்பட்டன.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக மாலை வேளையில் மலைப்பகுதியில் மழை பெய்ததால் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் இன்று தண்ணீர் வரத்து சற்று அதிகரித்து காணப்பட்டது. இதனால் இன்று குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. அவர்கள் கொரோனா வழிகாட்டு முறைகளை கடைபிடித்து வரிசையில் நின்று குளித்து சென்றனர்.
இதேபோல் நெல்லை மாவட்டத்திலும் ஆங்காங்கே நேற்று இரவு மழை பெய்தது. மணிமுத்தாறு அணைப்பகுதியில் 2.4 மில்லிமீட்டர் மழை பதிவானது. 143 அடி உச்சநீர்மட்டம் கொண்ட பிரதான அணையான பாபநாசத்தின் இன்றைய நீர்மட்டம்121.40அடியாகவும், சேர்வலாறு நீர்மட்டம் 123.95 அடியாகவும், மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 113.80 அடியாகவும், உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X