என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
X
பழைய சாதத்துடன் முட்டை சாப்பிட்ட சிறுவன் ‘திடீர்’ உயிரிழப்பு- தாய்க்கு தீவிர சிகிச்சை
Byமாலை மலர்27 Jan 2022 4:27 AM GMT (Updated: 27 Jan 2022 10:39 AM GMT)
ஓட்டப்பிடாரம் அருகே பழையசாதமும் முட்டையும் சாப்பிட்ட பள்ளி மாணவன் உயிரிழந்தார். தாய்க்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
புதியம்புத்தூர்:
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே மேல லட்சுமிபுரம் கிராமத்தை சேர்ந்தவர் அருணாச்சலம். இவரது மனைவி கனகலட்சுமி. இவர்களது மகன் ரஞ்சித் (வயது 15). இவர் அப்பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில் கடந்த 22-ந் தேதி இரவு கனகலட்சுமி மற்றும் அவரது மகன் ரஞ்சித் ஆகிய இருவரும் பழைய சாதமும், முட்டையும் சாப்பிட்டு உள்ளனர். நள்ளிரவில் திடீரென இருவருக்கும் வயிற்றுவலி ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து தாய்-மகனுக்கு ஓட்டப்பிடாரம் அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டது.
தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக இருவரும் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் ரஞ்சித் சிகிச்சை பலனின்றி நேற்று நள்ளிரவு பரிதாபமாக உயிரிழந்தார். கனகலட்சுமிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக ஓட்டப்பிடாரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தாய்- மகன் சாப்பிட்ட உணவு ஒவ்வாமை காரணமாக மாணவன் உயிரிழந்தானா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரஞ்சித்தின் உடல் பிரேத பரிசோதனை முடிவுக்கு பின்பே உயிரிழந்ததற்கான காரணம் தெரியவரும் என போலீசார் கூறினர்.
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே மேல லட்சுமிபுரம் கிராமத்தை சேர்ந்தவர் அருணாச்சலம். இவரது மனைவி கனகலட்சுமி. இவர்களது மகன் ரஞ்சித் (வயது 15). இவர் அப்பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில் கடந்த 22-ந் தேதி இரவு கனகலட்சுமி மற்றும் அவரது மகன் ரஞ்சித் ஆகிய இருவரும் பழைய சாதமும், முட்டையும் சாப்பிட்டு உள்ளனர். நள்ளிரவில் திடீரென இருவருக்கும் வயிற்றுவலி ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து தாய்-மகனுக்கு ஓட்டப்பிடாரம் அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டது.
தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக இருவரும் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் ரஞ்சித் சிகிச்சை பலனின்றி நேற்று நள்ளிரவு பரிதாபமாக உயிரிழந்தார். கனகலட்சுமிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக ஓட்டப்பிடாரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தாய்- மகன் சாப்பிட்ட உணவு ஒவ்வாமை காரணமாக மாணவன் உயிரிழந்தானா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரஞ்சித்தின் உடல் பிரேத பரிசோதனை முடிவுக்கு பின்பே உயிரிழந்ததற்கான காரணம் தெரியவரும் என போலீசார் கூறினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X