search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மாணவன் ரஞ்சித்
    X
    மாணவன் ரஞ்சித்

    பழைய சாதத்துடன் முட்டை சாப்பிட்ட சிறுவன் ‘திடீர்’ உயிரிழப்பு- தாய்க்கு தீவிர சிகிச்சை

    ஓட்டப்பிடாரம் அருகே பழையசாதமும் முட்டையும் சாப்பிட்ட பள்ளி மாணவன் உயிரிழந்தார். தாய்க்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    புதியம்புத்தூர்:

    தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே மேல லட்சுமிபுரம் கிராமத்தை சேர்ந்தவர் அருணாச்சலம். இவரது மனைவி கனகலட்சுமி. இவர்களது மகன் ரஞ்சித் (வயது 15). இவர் அப்பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

    இந்நிலையில் கடந்த 22-ந் தேதி இரவு கனகலட்சுமி மற்றும் அவரது மகன் ரஞ்சித் ஆகிய இருவரும் பழைய சாதமும், முட்டையும் சாப்பிட்டு உள்ளனர். நள்ளிரவில் திடீரென இருவருக்கும் வயிற்றுவலி ஏற்பட்டுள்ளது.

    இதையடுத்து தாய்-மகனுக்கு ஓட்டப்பிடாரம் அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டது.

    தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக இருவரும் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    இந்நிலையில் ரஞ்சித் சிகிச்சை பலனின்றி நேற்று நள்ளிரவு பரிதாபமாக உயிரிழந்தார். கனகலட்சுமிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது தொடர்பாக ஓட்டப்பிடாரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தாய்- மகன் சாப்பிட்ட உணவு ஒவ்வாமை காரணமாக மாணவன் உயிரிழந்தானா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ரஞ்சித்தின் உடல் பிரேத பரிசோதனை முடிவுக்கு பின்பே உயிரிழந்ததற்கான காரணம் தெரியவரும் என போலீசார் கூறினர்.
    Next Story
    ×