search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பாஜக மாநில தலைவர் அண்ணாமலை
    X
    பாஜக மாநில தலைவர் அண்ணாமலை

    மாணவி இறப்பிற்கு நியாயம் வேண்டி தமிழக பா.ஜ.க.வினர் இன்று உண்ணாவிரத போராட்டம்

    சென்னையில் நடைபெறும் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் பா.ஜ.க.மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர்.
    சென்னை:

    தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள மைக்கேல்பட்டி தூய இருதய மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்த லாவண்யா (17) என்ற மாணவி, விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் தமிழகத்தில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. 

    விடுதியில் தங்கி படித்து வந்த லாவண்யாவை, மதம் மாறும்படி கூறி வற்புறுத்தியதாலும், தொடர்ந்து தொந்தரவு கொடுத்ததாலும் அவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதுதொடர்பாக லாவண்யா பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது. 

    இந்நிலையில் மாணவி லாவண்யா இறப்பிற்கு நியாயம் வேண்டி பாஜக மாநில தலைவர் கே. அண்ணாமலை  தலைமையில் சென்னையில் இன்று உண்ணாவிரதம் போராட்டம் நடைபெறுகிறது. 

    காலை பத்து மணி அளவில் வள்ளுவர் கோட்டம் அருகே நடைபெறும் இந்த போராட்டத்திற்கு முன்னாள் மத்திய அமைச்சர்  பொன் ராதாகிருஷ்ணன் , முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்  சி.பி. ராதாகிருஷ்ணன் , முன்னாள் தேசிய செயலாளர்  H.ராஜா , சட்டமன்ற உறுப்பினர்  நயினார் நாகேந்திரன் மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள் என்று மாநில பா.ஜ.க.வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
    Next Story
    ×