என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
X
வாழப்பாடி பகுதிக்கு இரைதேடி வரும் பலவிதமான பறவைகள்
Byமாலை மலர்23 Jan 2022 7:12 AM GMT (Updated: 23 Jan 2022 7:12 AM GMT)
வாழப்பாடி பகுதி நீர்நிலைகளில் தண்ணீர் நிரம்பியுள்ளதால், இரைதேடி பலவிதமான பறவைகள் வருகின்றன.
வாழப்பாடி:
சேலம் மாவட்டம் வாழப்பாடி, பெத்தநாயக்கன்பாளையம், அயோத்தியாப்பட்டணம், ஏத்தாப்பூர், பேளூர், கருமந்துறை, அருநூற்றுமலை பகுதிகளில் பெரும்பாலான மக்கள் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்களையே பிரதானமாக கொண்டுள்ளனர்.
வாழப்பாடி பகுதியில், 10 ஆண்டுக்கு பிறகு கடந்தாண்டு இறுதியில் பெய்த பலத்த மழையால், வசிஷ்டநதி, கரியக்கோயில் ஆறு உள்ளிட்ட, ஆறுகள், நீரோடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஆணைமடுவு மற்றும் கரியக்கோயில் அணைகள் நிரம்பின. பெரும்பாலான ஏரி, குளம், குட்டை, பாலி, சுணைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது.
இதனால், வாழப்பாடி பகுதிக்கு வெண்ணிற கொக்கு, நாரை, நீர்க்காகம் உள்ளிட்ட நீர்நிலைகளை வாழிடமாகக் கொண்ட பறவையினங்கள், பல்வேறு பகுதியில் இருந்து வருகை தந்துள்ளன.
இவற்றில் வெண்ணிற கொக்குகள் மற்றும் நாரைகளும், நீர்நிலைகளில் மட்டுமின்றி கிராமப்புற வயல்வெளிகளில் கூட்டம் கூட்டமாக முகாமிட்டு இரைத்தேடி வருகின்றன. ஏராளமான பறவைகள் சுற்றித்திரியும் காட்சிகள், காண்போர் கண்களுக்கு விருந்தளித்து வருகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X