என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
X
காங்கிரஸ் நடத்தும் பாதயாத்திரை அரசியல் உள்நோக்கமானது- ஜி.கே. வாசன் கண்டனம்
Byமாலை மலர்10 Jan 2022 3:53 AM GMT (Updated: 10 Jan 2022 3:53 AM GMT)
தமிழக தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் தமிழக விவசாயிகளின் நலன் கருதி, கர்நாடக காங்கிரஸ் கட்சியின் பாதயாத்திரையை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை:
த.மா.கா தலைவர் ஜி.கே. வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
வளர்ச்சிக்கும், காவிரி டெல்டா விவசாயிகளின் செழிப்பிற்கும், உயர்விற்கும் காலம் காலமாக காவிரியையே நம்பி இருக்கிறார்கள்.
மேகதாதுவில் அணை கட்டும் பிரச்சினையை தொடர்ந்து ஊக்குவிக்கும் விதமாக, கர்நாடகா காங்கிரசார் மேகதாதுவில் அணை கட்ட, கர்நாடகா அரசை வலியுறுத்தி தொடர்ந்து 11 நாட்கள் பாதயாத்திரை நடத்துவது தமிழக மக்களை வஞ்சிக்கும் செயலாகும்.
காவிரி நீர் பிரச்சினை, தமிழகத்தின் பயிர் பிரச்சினையல்ல உயிர் பிரச்சினை. கர்நாடகா காங்கிரசாரின் இந்த செயல், அரசியல் உள்நோக்கம் கொண்டது, மிகவும் கண்டிக்கதக்கது. இதை நன்கு உணர்ந்திருக்கும் தமிழக தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் தமிழக விவசாயிகளின் நலன் கருதி, கர்நாடக காங்கிரஸ் கட்சியின் பாதயாத்திரையை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்.
இதுவே தமிழக டெல்டா பகுதி மற்றும் அனைத்து விவசாயிகளுடைய எண்ணங்களும், கோரிக்கைகளும் ஆகும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
த.மா.கா தலைவர் ஜி.கே. வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
வளர்ச்சிக்கும், காவிரி டெல்டா விவசாயிகளின் செழிப்பிற்கும், உயர்விற்கும் காலம் காலமாக காவிரியையே நம்பி இருக்கிறார்கள்.
மேகதாதுவில் அணை கட்டும் பிரச்சினையை தொடர்ந்து ஊக்குவிக்கும் விதமாக, கர்நாடகா காங்கிரசார் மேகதாதுவில் அணை கட்ட, கர்நாடகா அரசை வலியுறுத்தி தொடர்ந்து 11 நாட்கள் பாதயாத்திரை நடத்துவது தமிழக மக்களை வஞ்சிக்கும் செயலாகும்.
காவிரி நீர் பிரச்சினை, தமிழகத்தின் பயிர் பிரச்சினையல்ல உயிர் பிரச்சினை. கர்நாடகா காங்கிரசாரின் இந்த செயல், அரசியல் உள்நோக்கம் கொண்டது, மிகவும் கண்டிக்கதக்கது. இதை நன்கு உணர்ந்திருக்கும் தமிழக தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் தமிழக விவசாயிகளின் நலன் கருதி, கர்நாடக காங்கிரஸ் கட்சியின் பாதயாத்திரையை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்.
இதுவே தமிழக டெல்டா பகுதி மற்றும் அனைத்து விவசாயிகளுடைய எண்ணங்களும், கோரிக்கைகளும் ஆகும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X