என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
X
கோவையில் கடன் தருவதாக கூறி வியாபாரியிடம் ரூ.10 லட்சம் கள்ள நோட்டு கொடுத்து ஏமாற்றிய கும்பல்
Byமாலை மலர்9 Jan 2022 6:37 AM GMT (Updated: 9 Jan 2022 6:37 AM GMT)
கடன் தருவதாக கூறி வியாபாரியிடம் ரூ.10 லட்சம் கள்ள நோட்டு கொடுத்து ஏமாற்றிய கும்பல் கமிஷனாக ரூ.1 லட்சம் பெற்று கொண்டு தப்பினர்.
கோவை:
கோவை சரவணம்பட்டி யை அடுத்த தொப்பம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சுகுமார் (வயது 46). இவர் கணபதி பகுதியில் தனியார் நிறுவனம் நடத்தி வருகிறார்.
இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இவரது செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசி நபர் உங்களுக்கு வங்கி மூலம் தொழில் செய்ய ரூ.10 லட்சம் கடன் ஏற்பாடு செய்து தருவதாக கூறினார்.
அதற்கு கமிஷனாக எங்களுக்கு ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் தந்தால் போதும் எனவும் சொன்னார்.
அந்த நபரின் பேச்சை நம்பிய சுகுமார் தனது ஆதார்கார்டு உள்ளிட்ட சான்றிதழ் நகல்களை அவர்களிடம் கொடுக்க சம்மதித்தார். கணபதி அருகே சுகுமாரை வருமாறு கூறினர். அங்கு விக்கி, ஹரி என 2 பேர் தங்களை சுகுமாரிடம் அறிமுகப்படுத்திக் கொண்டனர். அவர்களிடம் ஆதார் கார்டு, பான்கார்டு உள்ளிட்ட நகல்களை சுகுமார் கொடுத்தார்.
சில நாட்கள் கடந்த பின்னர் சுகுமாரை தொடர்பு கொண்ட அந்த நபர்கள் உங்களுக்கு வங்கியில் இருந்து கடனாக ரூ.10 லட்சம் வந்துள்ளது. எனவே நீங்கள் எங்களது கமிஷன் பணம் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் எடுத்துக்கொண்டு காளப்பட்டி சாலைக்கு வருமாறு கூறினர்.
உடனே சுகுமாரும் அந்த இடத்துக்கு சென்று அந்த நபர்களிடம் ரூ. 1 லட்சத்து 50 ஆயிரத்தை கொடுத்தார். பின்னர் அவர்கள் கொடுத்த ரூ.10 லட்சத்தை வாங்கிக் கொண்டு தனது நிறுவனத்துக்கு சென்றார். .
அங்கு சென்று பணத்தை எண்ணிப் பார்த்தபோது அந்த நபர்கள் கொடுத்த அனைத்து பணமும்கள்ள நோட்டுகள் என்பதும், ரூபாய் நோட்டுகளை ஜெராக்ஸ் எடுத்து கொடுத்து இருந்ததும் தெரியவந்தது.
தான் ஏமாற்றப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்த சுகுமார் உடனடியாக சரவணம்பட்டி போலீசில் புகார் தெரிவித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து போலி ஜெராக்ஸ் ரூபாய் நோட்டுகளை கொடுத்து ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்தை ஏமாற்றி மோசடி செய்த 2 மர்ம வாலிபர்களை தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X