என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
X
கன்னியாகுமரியில் 2-வது நாளாக கடல் சீற்றம்: படகு போக்குவரத்து ரத்து
Byமாலை மலர்4 Jan 2022 6:34 AM GMT (Updated: 4 Jan 2022 6:34 AM GMT)
கன்னியாகுமரி கடலில் நேற்று சூறாவளி காற்று வீசியது. இதனால் படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரியில் இன்றும் 2-வது நாளாக பயங்கர சூறாவளி காற்றுடன் கடல் சீற்றம் நீடித்தது. இதனால் விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு இன்றும் படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. இதனால் விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிட வந்த சுற்றுலா பயணிகள் படகில் செல்ல முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
கடலில் ஏற்பட்ட சூறாவளி காற்றினால் ராட்சத அலைகள் எழும்பியது. சுமார் 10 அடி முதல் 15 அடி உயரத்துக்கு பொங்கி எழுந்து வந்த ராட்சத அலைகள் கரையை நோக்கி ஆக்ரோஷமாக வந்து பாறைகளில் முட்டி மோதி சிதறிய காட்சி பார்ப்பதற்கு பயங்கரமாக இருந்தது. இதை கண்டு சுற்றுலா பயணிகள் ஓட்டம் பிடித்தனர்.
கடல் சீற்றத்தையும் பொருட்படுத்தாமல் சில இளைஞர்கள் கடலில் இறங்கி குளித்தனர். அவர்களை சுற்றுலா போலீசார் எச்சரித்து வெளியேற்றினர். கன்னியாகுமரி, சின்ன முட்டம், ஆரோக்கியபுரம், கோவளம், வாவத்துறை, சிலுவை நகர், புதுக்கிராமம், கீழமணக்குடி, மணக்குடி, பள்ளம் ஆகிய கடற்கரை கிராமங்களிலும் இன்று பயங்கர கடல் சீற்றம் ஏற்பட் டது.
பெரும்பாலான மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. இதனால் இன்று மீன் வரத்து குறைவாக இருந்தது. மீன் விலையும் அதிகமாக இருந்தது. நெத்திலி, சாளை போன்ற சிறு ரக மீன்களே கிடைத்தன.
கன்னியாகுமரியில் இன்றும் 2-வது நாளாக பயங்கர சூறாவளி காற்றுடன் கடல் சீற்றம் நீடித்தது. இதனால் விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு இன்றும் படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. இதனால் விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிட வந்த சுற்றுலா பயணிகள் படகில் செல்ல முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
கடலில் ஏற்பட்ட சூறாவளி காற்றினால் ராட்சத அலைகள் எழும்பியது. சுமார் 10 அடி முதல் 15 அடி உயரத்துக்கு பொங்கி எழுந்து வந்த ராட்சத அலைகள் கரையை நோக்கி ஆக்ரோஷமாக வந்து பாறைகளில் முட்டி மோதி சிதறிய காட்சி பார்ப்பதற்கு பயங்கரமாக இருந்தது. இதை கண்டு சுற்றுலா பயணிகள் ஓட்டம் பிடித்தனர்.
கடல் சீற்றத்தையும் பொருட்படுத்தாமல் சில இளைஞர்கள் கடலில் இறங்கி குளித்தனர். அவர்களை சுற்றுலா போலீசார் எச்சரித்து வெளியேற்றினர். கன்னியாகுமரி, சின்ன முட்டம், ஆரோக்கியபுரம், கோவளம், வாவத்துறை, சிலுவை நகர், புதுக்கிராமம், கீழமணக்குடி, மணக்குடி, பள்ளம் ஆகிய கடற்கரை கிராமங்களிலும் இன்று பயங்கர கடல் சீற்றம் ஏற்பட் டது.
பெரும்பாலான மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. இதனால் இன்று மீன் வரத்து குறைவாக இருந்தது. மீன் விலையும் அதிகமாக இருந்தது. நெத்திலி, சாளை போன்ற சிறு ரக மீன்களே கிடைத்தன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X