என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
X
காய்கறி சந்தையை முறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்- ஓ.பன்னீர்செல்வம்
Byமாலை மலர்24 Dec 2021 5:35 AM GMT (Updated: 24 Dec 2021 5:35 AM GMT)
தற்போதுள்ள விலைவாசி ஏற்றத்தினை கருத்தில் கொண்டு காய்கறி சந்தையை முறைப்படுத்தும் நடவடிக்கையினை அரசு எடுக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை:
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நுகர்வோருக்கான தரமான பொருட்கள் மற்றும் சேலைகள் நியாயமான விலையில் கிடைக்கப் பெறுவதையும், விவசாயிகளின் விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்கப்பெறுவதையும் உறுதி செய்ய வேண்டிய கடமையும், பொறுப்பும் மாநில அரசுக்கு உண்டு. ஆனால் கடந்த 7 மாத கால தி.மு.க. ஆட்சியில் இதற்கு நேர்மாறான சூழ்நிலை நிலவுகிறது என்பதை தான் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
கடந்த 7 மாத கால தி.மு.க. ஆட்சியில் காய்கறிகளின் விலை ஏறிக்கொண்டே செல்கிறது. இந்த காய்கறிகளை விளைவிப்பவர்கள் விவசாயிகள். அப்படியென்றால் காய்கறிகளின் விலை உயர்ந்து கொண்டே செல்கின்ற இந்த தருணத்தில் விவசாயிகள் பெரிய அளவில் பயன் அடைந்து இருக்க வேண்டும். ஆனால் விவசாயிகள் பெரிய அளவில் பயன் அடையவில்லை என்பது யதார்த்தம்.
தக்காளியை எடுத்துக் கொண்டால் அது கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் போன்ற மாவட்டங்களில் தான் அதிகமாக விளைகிறது. கிருஷ்ணகிரியில் உள்ள பண்ணைவாசலில் ஒரு கிலோ தக்காளி சராசரியாக ரூ.30 என்ற விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே தக்காளி கோயம்பேடு சந்தையில் அதிகபட்சமாக ரு.45-க்கும், வெளிச்சந்தையில் அதிகபட்சமாக ரூ.60 முதல் ரூ.65-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதே போன்று திருப்பூர், தேனி, திண்டுக்கல் போன்ற மாவட்டங்களில் முருங்கைக்காய் அதிகமாக விளைகிறது. திருப்பூர் பண்ணைவாசலில் ரூ.100 முதல் ரூ.150 வரை விற்னை செய்யப்படும் முருங்கைக்காய் கோயம்பேடு சந்தையில் அதிகபட்சமாக ரூ.220-க்கும், வெளிச்சந்தையில் அதிகபட்சமாக ரூ.430-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அரியலூர் பண்ணை வாசலில் ஒரு கிலோ ரூ.54-க்கு விற்பனை செய்யப்படும் வெண்டைக்காய், கோயம்பேடு சந்தையில் அதிகபட்சமாக ரூ.100-க்கும், வெளிச்சந்தையில் அதிகபட்சமாக ரூ.140-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதே போன்று பண்ணை வாசலில் ஒரு கிலோ ரூ.20-க்கு விற்பனை செய்யப்படும் கத்தரிக்காய், கோயம்பேடு சந்தையில் ரூ.50-க்கும், வெளிச்சந்தையில் அதிகபட்சமாக ரு.120-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இடத்திற்கு தகுந்தாற்போல் வெளிச்சந்தையில் விலை குறையவும், அதிகரிக்கவும் வாய்ப்பு இருக்கிறது.
இதிலிருந்து உற்பத்தி செய்யும் இடத்திற்கும், வெளிச்சந்தைக்குமான விலை வித்தியாசம் என்பது 2 மடங்கு முதல் 3 மடங்கு வரை அதிகமாக இருக்கிறது என்பது தெளிவாகிறது.
தக்காளி விலை ஒரு கிலோ ரூ.160-க்கு விற்பனை செய்யப்பட்ட போதே, விவசாயிகளுக்கு ரூ.40 தான் கிடைத்தது என்றும், விலை ஏற்றத்தினால் பெரிய பலன் ஏதும் விவசாயிகளுக்கு கிடைப்பதில்லை என்றும் கூறப்படுகிறது.
நுகர்வோர்களும் விலை ஏற்றத்தினால் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். வெளிச்சந்தையில் காய்கறிகளை விற்பனை செய்பவர்களின் லாபம் என்பது விற்பனையைப் பொறுத்தே அமைந்துள்ளது. ஆனால் இந்த விலையேற்றத்தினால் அதிக பயனடைபவர்கள் இடைத்தரகர்கள் மட்டும் தான். லாபமோ, இழப்போ அவர்களுக்குரிய தொகை கிடைத்துவிடுகிறது. இதற்கு காரணம் காய்கறி சந்தையை முறைப்படுத்தும் அமைப்பு அரசாங்கத்திடம் இல்லாதது தான்.
ஒரு தொழில் என்றால் அந்த தொழிலில் ஈடுபட்டிருக்கும் உற்பத்தியாளர்கள், மொத்த விற்பனையாளர்கள், சில்லரை விற்பனையாளர்கள், நுகர்வோர்கள் என அனைவரும் சமமாக பயன் அடைய வேண்டும். இதனையும், தற்போதுள்ள விலைவாசி ஏற்றத்தினையும் கருத்தில் கொண்டு காய்கறி சந்தையை முறைப்படுத்தும் நடவடிக்கையினை அரசு எடுக்க வேண்டும் என்று முதல்-அமைச்சரை கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நுகர்வோருக்கான தரமான பொருட்கள் மற்றும் சேலைகள் நியாயமான விலையில் கிடைக்கப் பெறுவதையும், விவசாயிகளின் விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்கப்பெறுவதையும் உறுதி செய்ய வேண்டிய கடமையும், பொறுப்பும் மாநில அரசுக்கு உண்டு. ஆனால் கடந்த 7 மாத கால தி.மு.க. ஆட்சியில் இதற்கு நேர்மாறான சூழ்நிலை நிலவுகிறது என்பதை தான் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
கடந்த 7 மாத கால தி.மு.க. ஆட்சியில் காய்கறிகளின் விலை ஏறிக்கொண்டே செல்கிறது. இந்த காய்கறிகளை விளைவிப்பவர்கள் விவசாயிகள். அப்படியென்றால் காய்கறிகளின் விலை உயர்ந்து கொண்டே செல்கின்ற இந்த தருணத்தில் விவசாயிகள் பெரிய அளவில் பயன் அடைந்து இருக்க வேண்டும். ஆனால் விவசாயிகள் பெரிய அளவில் பயன் அடையவில்லை என்பது யதார்த்தம்.
தக்காளியை எடுத்துக் கொண்டால் அது கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் போன்ற மாவட்டங்களில் தான் அதிகமாக விளைகிறது. கிருஷ்ணகிரியில் உள்ள பண்ணைவாசலில் ஒரு கிலோ தக்காளி சராசரியாக ரூ.30 என்ற விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே தக்காளி கோயம்பேடு சந்தையில் அதிகபட்சமாக ரு.45-க்கும், வெளிச்சந்தையில் அதிகபட்சமாக ரூ.60 முதல் ரூ.65-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதே போன்று திருப்பூர், தேனி, திண்டுக்கல் போன்ற மாவட்டங்களில் முருங்கைக்காய் அதிகமாக விளைகிறது. திருப்பூர் பண்ணைவாசலில் ரூ.100 முதல் ரூ.150 வரை விற்னை செய்யப்படும் முருங்கைக்காய் கோயம்பேடு சந்தையில் அதிகபட்சமாக ரூ.220-க்கும், வெளிச்சந்தையில் அதிகபட்சமாக ரூ.430-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அரியலூர் பண்ணை வாசலில் ஒரு கிலோ ரூ.54-க்கு விற்பனை செய்யப்படும் வெண்டைக்காய், கோயம்பேடு சந்தையில் அதிகபட்சமாக ரூ.100-க்கும், வெளிச்சந்தையில் அதிகபட்சமாக ரூ.140-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதே போன்று பண்ணை வாசலில் ஒரு கிலோ ரூ.20-க்கு விற்பனை செய்யப்படும் கத்தரிக்காய், கோயம்பேடு சந்தையில் ரூ.50-க்கும், வெளிச்சந்தையில் அதிகபட்சமாக ரு.120-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இடத்திற்கு தகுந்தாற்போல் வெளிச்சந்தையில் விலை குறையவும், அதிகரிக்கவும் வாய்ப்பு இருக்கிறது.
இதிலிருந்து உற்பத்தி செய்யும் இடத்திற்கும், வெளிச்சந்தைக்குமான விலை வித்தியாசம் என்பது 2 மடங்கு முதல் 3 மடங்கு வரை அதிகமாக இருக்கிறது என்பது தெளிவாகிறது.
தக்காளி விலை ஒரு கிலோ ரூ.160-க்கு விற்பனை செய்யப்பட்ட போதே, விவசாயிகளுக்கு ரூ.40 தான் கிடைத்தது என்றும், விலை ஏற்றத்தினால் பெரிய பலன் ஏதும் விவசாயிகளுக்கு கிடைப்பதில்லை என்றும் கூறப்படுகிறது.
நுகர்வோர்களும் விலை ஏற்றத்தினால் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். வெளிச்சந்தையில் காய்கறிகளை விற்பனை செய்பவர்களின் லாபம் என்பது விற்பனையைப் பொறுத்தே அமைந்துள்ளது. ஆனால் இந்த விலையேற்றத்தினால் அதிக பயனடைபவர்கள் இடைத்தரகர்கள் மட்டும் தான். லாபமோ, இழப்போ அவர்களுக்குரிய தொகை கிடைத்துவிடுகிறது. இதற்கு காரணம் காய்கறி சந்தையை முறைப்படுத்தும் அமைப்பு அரசாங்கத்திடம் இல்லாதது தான்.
ஒரு தொழில் என்றால் அந்த தொழிலில் ஈடுபட்டிருக்கும் உற்பத்தியாளர்கள், மொத்த விற்பனையாளர்கள், சில்லரை விற்பனையாளர்கள், நுகர்வோர்கள் என அனைவரும் சமமாக பயன் அடைய வேண்டும். இதனையும், தற்போதுள்ள விலைவாசி ஏற்றத்தினையும் கருத்தில் கொண்டு காய்கறி சந்தையை முறைப்படுத்தும் நடவடிக்கையினை அரசு எடுக்க வேண்டும் என்று முதல்-அமைச்சரை கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X