search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்ற போது எடுத்த படம்.
    X
    தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்ற போது எடுத்த படம்.

    பொங்கலுக்கு ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும் - தே.மு.தி.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம்

    ஒமைக்ரான் கொரோனா பரவும் நிலையில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என தே.மு.தி.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    சென்னை:

    தே.மு.தி.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் எல்.கே.சுதீஷ், பார்த்தசாரதி மற்றும் மாவட்ட செயலாளர் கள் பங்கேற்றனர்.

    இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

    * தமிழக அரசு ஆண்டு தோறும் தை பொங்கலுக்கு பரிசு பொருட்களும், பணமும் வழங்குவது வாடிக்கையாகும். இந்த ஆண்டும் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும்.

    * வடகிழக்கு பருவமழை காரணமாக ஏற்பட்டுள்ள பயிர்சேதத்தை கணக்கிட்டு விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் நஷ்டஈடு வழங்க வேண்டும்.

    * தமிழகத்தில் ஆசிரியர்கள் பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுவதை தடுக்க கடும் தண்டனை வழங்க வேண்டும்.

    * ஒமைக்ரான் கொரோனா பரவும் நிலையில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.

    * நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்த வேண்டும். கடந்த முறை உள்ளாட்சி தேர்தலில் நடைபெற்றது போல பணப்பட்டு வாடா நடைபெறாமல் தேர்தல் ஆணையம் கவனமுடன் செயல்பட வேண்டும்.

    * பெட்ரோல்-டீசல் விலையை குறைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    * முல்லை பெரியாறு அணையை கேரள அரசுக்கு விட்டுக்கொடுக்காமல் 152 அடியாக உயர்த்த வழி செய்ய வேண்டும் என்பது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
    Next Story
    ×