என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
X
முட்டை விலை மேலும் 20 காசுகள் உயர்வு
Byமாலை மலர்6 Dec 2021 3:28 AM GMT (Updated: 6 Dec 2021 3:28 AM GMT)
தற்போது மழை குறைந்து நிலைமை சீராகி வருவதால் அதிக அளவில் முட்டைகள் அனுப்பப்படுகிறது. இதனால் முட்டை கொள்முதல் விலையும் அதிகரிக்கப்பட்டு உள்ளது.
நாமக்கல்:
நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 450 காசுகளாக இருந்து வந்தது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முட்டையின் கொள்முதல் விலையை அதிரடியாக 15 காசுகள் உயர்த்தி 465 காசுகளாக நிர்ணயித்தனர். இந்த நிலையில் இன்று காலை நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முட்டை விலையை மேலும் 20 காசுகள் உயர்த்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி இன்று முட்டை கொள்முதல் விலை 485 காசுகளாக நிர்ணயிக்கப்பட்டது.
இதுகுறித்து தமிழ்நாடு முட்டைக்கோழி பண்ணையாளர்கள் மார்க்கெட்டிங் சொசைட்டி தலைவர் வாங்கிலி சுப்ரமணியம் கூறுகையில், வடமாநிலங்களில் குளிர்காலம் தொடங்கி உள்ளதால் கடந்த ஒரு வாரமாக அதிகமாக முட்டை விற்பனைக்கு அனுப்பப்பட்டு வருகிறது. மேலும் முட்டை ஏற்றுமதியும் செய்யப்படுகிறது.
அதன்படி ஒரு வாரத்தில் மட்டும் ஒன்றரை கோடி முட்டை அனுப்பப்பட்டு உள்ளது. ஏற்கனவே மழை காரணமாக முட்டைகளை அடுக்கி வைக்க அட்டை தட்டுப்பாடு ஏற்பட்டது. தற்போது மழை குறைந்து நிலைமை சீராகி வருவதால் அதிக அளவில் முட்டைகள் அனுப்பப்படுகிறது. இதனால் முட்டை கொள்முதல் விலையும் அதிகரிக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 450 காசுகளாக இருந்து வந்தது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முட்டையின் கொள்முதல் விலையை அதிரடியாக 15 காசுகள் உயர்த்தி 465 காசுகளாக நிர்ணயித்தனர். இந்த நிலையில் இன்று காலை நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முட்டை விலையை மேலும் 20 காசுகள் உயர்த்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி இன்று முட்டை கொள்முதல் விலை 485 காசுகளாக நிர்ணயிக்கப்பட்டது.
இதுகுறித்து தமிழ்நாடு முட்டைக்கோழி பண்ணையாளர்கள் மார்க்கெட்டிங் சொசைட்டி தலைவர் வாங்கிலி சுப்ரமணியம் கூறுகையில், வடமாநிலங்களில் குளிர்காலம் தொடங்கி உள்ளதால் கடந்த ஒரு வாரமாக அதிகமாக முட்டை விற்பனைக்கு அனுப்பப்பட்டு வருகிறது. மேலும் முட்டை ஏற்றுமதியும் செய்யப்படுகிறது.
அதன்படி ஒரு வாரத்தில் மட்டும் ஒன்றரை கோடி முட்டை அனுப்பப்பட்டு உள்ளது. ஏற்கனவே மழை காரணமாக முட்டைகளை அடுக்கி வைக்க அட்டை தட்டுப்பாடு ஏற்பட்டது. தற்போது மழை குறைந்து நிலைமை சீராகி வருவதால் அதிக அளவில் முட்டைகள் அனுப்பப்படுகிறது. இதனால் முட்டை கொள்முதல் விலையும் அதிகரிக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X