என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
பழனியில் பராமரிப்பு பணிக்காக நாளை ரோப்கார் சேவை நிறுத்தம்
பழனி:
3-ம் படை வீடான பழனி முருகன் கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். ஒவ்வொரு மாதமும் திருவிழா என வருடம் முழுவதும் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. அடிவாரத்தில் இருந்து மலைக்கோவிலுக்கு ரோப்கார், விஞ்சு மற்றும் யானை, படிப்பாதைகள் வழியாக பக்தர்கள் சென்று வருகின்றனர்.
3 நிமிடத்தில் மலைக்கோவிலுக்கு சென்று விடலாம் என்பதால் பல்வேறு தரப்பினரும் இதனை பயன்படுத்தி வருகின்றனர். ரோப்கார் தினமும் ஒரு மணி நேரம், மாதம் ஒருநாளும் வருடத்திற்கு ஒரு மாதமும் பராமரிப்பு பணிக்காக நிறுத்தப்படும். அப்போது ரோப்கார் பெட்டிகள், பல் சக்கரங்கள், இழுவை கம்பிகள் ஆகியவற்றை பராமரித்து வருகின்றனர்.
அதன்படி நாளை பராமரிப்பு பணி உள்ளதால் ரோப்கார் சேவை நிறுத்தப்படும் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பக்தர்கள் மின் இழுவை ரெயில் மற்றும் படிப்பாதையை பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவுறுத்தி உள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்