search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    வீட்டுக்கு அழைத்து மாணவிக்கு செக்ஸ் தொல்லை- பழனி அரசு பள்ளி ஆசிரியர் போக்சோவில் கைது

    பழனியில் 10-ம் வகுப்பு மாணவியை வீட்டுக்கு வரவழைத்து செக்ஸ் தொல்லை கொடுத்த ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
    பழனி:

    திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள அமரப்பூண்டியில் அரசு உதவி பெறும் உயர்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் தற்காலிக ஆங்கில ஆசிரியராக நந்தவனப்பட்டியைச் சேர்ந்த நாட்ராயன் (வயது 30) என்பவர் பணியாற்றி வருகிறார்.

    இவருக்கு திருமணமாகி விட்டது. இந்நிலையில் அதே பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவருக்கு கடந்த ஒரு ஆண்டாக செக்ஸ் தொல்லை கொடுத்து வந்துள்ளார். தனக்கு திருமணம் நடந்ததை மறைத்து அவரை திருமணம் செய்து கொள்வதாக கூறி வீட்டுக்கு வரவழைத்து பாலியல் தொல்லை செய்துள்ளார்.

    அவரது நடத்தையில் சந்தேகப்பட்ட மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்தார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவியின் தாய் பழனி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் ஆசிரியர் நாட்ராயன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    பழனி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ஆசிரியர் நாட்ராயன் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். 
    Next Story
    ×