என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தமிழக கவர்னர் ஆர்.என். ரவி சுசீந்திரம் கோவிலில் சாமி தரிசனம்
Byமாலை மலர்25 Nov 2021 5:37 AM GMT
கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் உள்ள திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமான வெங்கடாசலபதி கோவிலில் கவர்னர் ஆர்.என். ரவி சாமி தரிசனம் செய்தார்.
சுசீந்திரம்:
தமிழக கவர்னர் ஆர்.என். ரவி 2 நாள் சுற்றுப்பயணமாக நேற்று கன்னியாகுமரி வந்தார்.
கன்னியாகுமரி வந்த கவர்னர் ஆர்.என். ரவி, கலெக்டர் அரவிந்த், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் ஆகியோர் வரவேற்றனர். பின்னர் கனனியாகுமரி விருந்தினர் மாளிகையில் சைனிக் நல வாரியத்தினர் மற்றும் முன்னாள் படை வீரர்களுடன் கலந்துரையாடினார்.
அங்கிருந்து படகு மூலம் விவேகானந்தர் பாறைக்கு சென்ற கவர்னருக்கு விவேகானந்தகேந்திரா நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. விவேகானந்தர் மண்டபத்தை கவர்னர் ஆர்.என். ரவி பார்வையிட்டார். அதன் பிறகு அங்கிருந்து மீண்டும் அரசு விருந்தினர் மாளிகைக்கு சென்றார்.
2-வது நாளான இன்று காலை 7.40 மணிக்கு சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி வந்தார். அவருக்கு கோவில் நிர்வாகத்தின் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து தாணுமாலயன் சன்னதி, ஆஞ்சநேயர் சன்னதியில் கவர்னர் குடும்பத்தோடு சாமி தரிசனம் செய்தார். பின்னர் 8.30 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு கார் மூலமாக கன்னியாகுமரிக்கு சென்றார்.
கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் உள்ள திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமான வெங்கடாசலபதி கோவிலுக்கு சென்றார். அங்கு கவர்னர் ஆர்.என். ரவி சாமி தரிசனம் செய்தார்.
இதை தொடர்ந்து விவேகானந்தகேந்திராவில் உள்ள ராமாயண தரிசன சித்திர கண்காட்சி கூடத்தையும் பார்வையிட்டார். அதன் பிறகு அரசினர் விருந்தினர் மாளிகைக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து கார் மூலமாக தூத்துக்குடிக்கு புறப்பட்டு சென்றார்.
கவர்னர் வருகையையடுத்து கன்னியாகுமரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொண்டனர்.
இதையும் படியுங்கள்...அண்ணா பிறந்த நாள்: நல்லெண்ண அடிப்படையில் 700 ஆயுள் கைதிகள் விடுதலை- அரசாணை வெளியீடு
தமிழக கவர்னர் ஆர்.என். ரவி 2 நாள் சுற்றுப்பயணமாக நேற்று கன்னியாகுமரி வந்தார்.
கன்னியாகுமரி வந்த கவர்னர் ஆர்.என். ரவி, கலெக்டர் அரவிந்த், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் ஆகியோர் வரவேற்றனர். பின்னர் கனனியாகுமரி விருந்தினர் மாளிகையில் சைனிக் நல வாரியத்தினர் மற்றும் முன்னாள் படை வீரர்களுடன் கலந்துரையாடினார்.
பின்னர் அங்கிருந்து கார் மூலமாக படகு தளத்திற்கு வந்தார். அங்கிருந்து தனி படகில் திருவள்ளுவர் சிலைக்கு சென்றார். அங்கு அவர் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையின் கால் பாதத்தில் மலர் தூவி வணங்கினார்.
2-வது நாளான இன்று காலை 7.40 மணிக்கு சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி வந்தார். அவருக்கு கோவில் நிர்வாகத்தின் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து தாணுமாலயன் சன்னதி, ஆஞ்சநேயர் சன்னதியில் கவர்னர் குடும்பத்தோடு சாமி தரிசனம் செய்தார். பின்னர் 8.30 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு கார் மூலமாக கன்னியாகுமரிக்கு சென்றார்.
கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் உள்ள திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமான வெங்கடாசலபதி கோவிலுக்கு சென்றார். அங்கு கவர்னர் ஆர்.என். ரவி சாமி தரிசனம் செய்தார்.
இதை தொடர்ந்து விவேகானந்தகேந்திராவில் உள்ள ராமாயண தரிசன சித்திர கண்காட்சி கூடத்தையும் பார்வையிட்டார். அதன் பிறகு அரசினர் விருந்தினர் மாளிகைக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து கார் மூலமாக தூத்துக்குடிக்கு புறப்பட்டு சென்றார்.
கவர்னர் வருகையையடுத்து கன்னியாகுமரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொண்டனர்.
இதையும் படியுங்கள்...அண்ணா பிறந்த நாள்: நல்லெண்ண அடிப்படையில் 700 ஆயுள் கைதிகள் விடுதலை- அரசாணை வெளியீடு
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X