என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் தூய்மை பணியாளர்கள் திடீர் உள்ளிருப்பு போராட்டம்
Byமாலை மலர்24 Nov 2021 6:23 AM GMT (Updated: 24 Nov 2021 6:23 AM GMT)
கூடுதல் மிகை நேர பணிக்கு ஊதியம் வழங்ககோரி தூய்மை பணியாளர்கள் இன்று காலை நாமக்கல் மருத்துவமனை வளாகத்தில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்ட அரசு மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளர்கள் 76 பேர் பணிபுரிகின்றனர்.
இந்த நிலையில் கூடுதல் மிகை நேர பணிக்கு ஊதியம் வழங்ககோரி தூய்மை பணியாளர்கள் இன்று காலை நாமக்கல் மருத்துவமனை வளாகத்தில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது மிகை ஊதியம், குறைந்த பட்ச ஊதியம் வழங்க வேண்டும் என அவர்கள் பல்வேறு கோஷங்கள் எழுப்பினர். இந்த திடீர் போராட்டத்தால் ஆஸ்பத்திரியில் பரபரப்பு நிலவியது.
தூய்மை பணியாளர்களிடம் தொடர்ந்து போலீசார் மற்றும் வருவாய் அதிகாரிகள் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.
இது குறித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக மருத்துவமனை தூய்மை பணியாளர்கள் முன்னேற்ற சங்க மாநில பொதுச்செயலாளர் தமிழ்செல்வி கூறியதாவது:-
மிகை நேரப்பணி காலத்தை கணக்கிட்டு தூய்மை பணியாளர்களுக்கு ரூ.4000 தருவதாக ஒப்பந்தம் போட்டப்பட்டது. இரு தவணையாக தருவதாக கூறி ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டனர். நவம்பர் மாதத்திலும், டிசம்பர் மாதத்திலும் தருவதாக கூறினார்கள். இதுவரையிலும் இந்த பணம் தராததால் ஒப்பந்த பணியாளர்கள் தொடர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
நாமக்கல் மாவட்ட அரசு மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளர்கள் 76 பேர் பணிபுரிகின்றனர்.
இந்த நிலையில் கூடுதல் மிகை நேர பணிக்கு ஊதியம் வழங்ககோரி தூய்மை பணியாளர்கள் இன்று காலை நாமக்கல் மருத்துவமனை வளாகத்தில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது மிகை ஊதியம், குறைந்த பட்ச ஊதியம் வழங்க வேண்டும் என அவர்கள் பல்வேறு கோஷங்கள் எழுப்பினர். இந்த திடீர் போராட்டத்தால் ஆஸ்பத்திரியில் பரபரப்பு நிலவியது.
தூய்மை பணியாளர்களிடம் தொடர்ந்து போலீசார் மற்றும் வருவாய் அதிகாரிகள் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.
இது குறித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக மருத்துவமனை தூய்மை பணியாளர்கள் முன்னேற்ற சங்க மாநில பொதுச்செயலாளர் தமிழ்செல்வி கூறியதாவது:-
மிகை நேரப்பணி காலத்தை கணக்கிட்டு தூய்மை பணியாளர்களுக்கு ரூ.4000 தருவதாக ஒப்பந்தம் போட்டப்பட்டது. இரு தவணையாக தருவதாக கூறி ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டனர். நவம்பர் மாதத்திலும், டிசம்பர் மாதத்திலும் தருவதாக கூறினார்கள். இதுவரையிலும் இந்த பணம் தராததால் ஒப்பந்த பணியாளர்கள் தொடர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X