என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சேதமடைந்துள்ள நெற்பயிர்களின் ஏக்கர் ஒன்றுக்கு ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும்- ஜி.கே.வாசன் கோரிக்கை
Byமாலை மலர்18 Nov 2021 6:34 AM GMT (Updated: 18 Nov 2021 6:34 AM GMT)
தமிழக அரசு பாதிக்கப்பட்டுள்ள விவசாய நிலங்களில் சேதமடைந்துள்ள பயிர்கள் அனைத்திற்கும் விவசாயிகளின் பாதிப்புக்கு ஏற்ப நிவாரணத்தை, இழப்பீட்டை உயர்த்தி வழங்க வேண்டும் என ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை:
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழக அரசு மழையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயத்தை பாதுகாக்கவும், விவசாயிகளின் நஷ்டத்தை ஈடுகட்டும் வகையிலும் நிவாரணத்தை வழங்க வேண்டும்.
தமிழக அரசு மழையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயப் பயிர்களுக்கு அறிவித்திருக்கும் நிவாரணம், இழப்பீடு போதுமானதல்ல.
குறிப்பாக விவசாயிகள் ஒவ்வொரு ஏக்கருக்கும் குறைந்தபட்சம் ரூபாய் 30 ஆயிரம் வரை செலவு செய்திருக்கிறார்கள். லட்சக்கணக்கான ஏக்கர் விளை நிலங்களில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் மழையில் மூழ்கி வீணாகிவிட்டது.
அது மட்டுமல்ல விவசாயப் பயிர்கள் முற்றிலும் சேதமடைந்துவிட்டது. இதன் காரணமாக விவசாயிகள் பெருத்த நஷ்டத்தில் இருக்கிறார்கள்.
ஆனால் சேதமடைந்துள்ள நெற்பயிர்களின் ஏக்கர் ஒன்றுக்கு ரூபாய் 8 ஆயிரம் வழங்கப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பு விவசாயிகளுக்கு ஏமாற்றத்தை அளித்திருக்கிறது. அதே போல சேதமடைந்துள்ள சம்பா பயிர்களுக்கு இழப்பீடு குறித்த அறிவிப்பும் ஏற்புடையதல்ல.
எனவே தமிழக அரசு பாதிக்கப்பட்டுள்ள விவசாய நிலங்களில் சேதமடைந்துள்ள பயிர்கள் அனைத்திற்கும் விவசாயிகளின் பாதிப்புக்கு ஏற்ப நிவாரணத்தை, இழப்பீட்டை உயர்த்தி வழங்க வேண்டும்.
மேலும் பாதிக்கப்பட்டுள்ள நெற்பயிற்களின் ஏக்கர் ஒன்றுக்கு ரூ.30 ஆயிரம் இழப்பீடாக வழங்கி, விவசாயத்தொழிலையும், விவசாயிகளையும் பாதுகாக்க முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழக அரசு மழையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயத்தை பாதுகாக்கவும், விவசாயிகளின் நஷ்டத்தை ஈடுகட்டும் வகையிலும் நிவாரணத்தை வழங்க வேண்டும்.
தமிழக அரசு மழையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயப் பயிர்களுக்கு அறிவித்திருக்கும் நிவாரணம், இழப்பீடு போதுமானதல்ல.
குறிப்பாக விவசாயிகள் ஒவ்வொரு ஏக்கருக்கும் குறைந்தபட்சம் ரூபாய் 30 ஆயிரம் வரை செலவு செய்திருக்கிறார்கள். லட்சக்கணக்கான ஏக்கர் விளை நிலங்களில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் மழையில் மூழ்கி வீணாகிவிட்டது.
அது மட்டுமல்ல விவசாயப் பயிர்கள் முற்றிலும் சேதமடைந்துவிட்டது. இதன் காரணமாக விவசாயிகள் பெருத்த நஷ்டத்தில் இருக்கிறார்கள்.
ஆனால் சேதமடைந்துள்ள நெற்பயிர்களின் ஏக்கர் ஒன்றுக்கு ரூபாய் 8 ஆயிரம் வழங்கப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பு விவசாயிகளுக்கு ஏமாற்றத்தை அளித்திருக்கிறது. அதே போல சேதமடைந்துள்ள சம்பா பயிர்களுக்கு இழப்பீடு குறித்த அறிவிப்பும் ஏற்புடையதல்ல.
எனவே தமிழக அரசு பாதிக்கப்பட்டுள்ள விவசாய நிலங்களில் சேதமடைந்துள்ள பயிர்கள் அனைத்திற்கும் விவசாயிகளின் பாதிப்புக்கு ஏற்ப நிவாரணத்தை, இழப்பீட்டை உயர்த்தி வழங்க வேண்டும்.
மேலும் பாதிக்கப்பட்டுள்ள நெற்பயிற்களின் ஏக்கர் ஒன்றுக்கு ரூ.30 ஆயிரம் இழப்பீடாக வழங்கி, விவசாயத்தொழிலையும், விவசாயிகளையும் பாதுகாக்க முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X