என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பெரியாறு அணையில் இருந்து திறக்கும் தண்ணீரின் அளவு மேலும் குறைப்பு
Byமாலை மலர்13 Nov 2021 4:07 AM GMT (Updated: 13 Nov 2021 4:07 AM GMT)
முல்லைப்பெரியாறு அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு மேலும் குறைக்கப்பட்டுள்ளதால் நீர்மட்டம் 140 அடியை நெருங்கி வருகிறது.
கூடலூர்:
முல்லைப்பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் பெய்த தொடர் மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்து வந்தது. அணையின் நீர்மட்டம் 142 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடந்த மாதம் 29-ந் தேதி மதகுகள் வழியாக கேரள பகுதிக்கு உபரி நீர் திறக்கப்பட்டதால் நீர்மட்டம் உயராமல் இருந்தது. 9 நாட்களுக்கு பிறகு தமிழக எதிர்கட்சிகள் மற்றும் விவசாயிகள் போராட்டத்தை தொடர்ந்து கேரள பகுதிக்கு திறந்து விடப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் பெரியாறு அணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவை படிப்படியாக குறைத்து நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தும் நடவடிக்கையில் தமிழக பொதுப்பணித்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் 1867 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்ட நிலையில் நேற்று 933 கன அடியாக குறைக்கப்பட்டது. இன்று காலை மேலும் குறைக்கப்பட்டு 556 கன அடி மட்டும் வெளியேற்றப்பட்டு வருகிறது.
தற்போது அணையின் நீர்மட்டம் 139.35 அடியாக உள்ளது. வினாடிக்கு 1797 கன அடி தண்ணீர் வருகிறது. நீர் இருப்பு 6962 மி. கன அடியாக உள்ளது. மேலும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் அணையின் நீர்மட்டம் அடுத்து வரும் நாட்களில் 142 அடி வரை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து பொதுப் பணித்துறை அதிகாரி தெரிவிக்கையில், முல்லைப் பெரியாறு அணையில் இருந்து கேரள பகுதிக்கு வெளியேற்றப்பட்ட உபரி நீர் நிறுத்தப்பட்டு தற்போது தமிழக பகுதிக்கு மட்டும் 556 கன அடிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டத்தை 142 அடி வரை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.
முல்லைப்பெரியாறு அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவை பொறுத்து பெரியாறு மின் உற்பத்தி நிலையத்தில் 4 ஜெனரேட்டர்கள் கொண்டு மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. கடந்த 1 மாதத்திற்கு மேலாக பெரியாறு அணையில் இருந்து 1000 கன அடிக்கு கூடுதலாக தண்ணீர் திறக்கப்பட்டதால் முழுமையாக 4 ஜெனரேட்டர்கள் மூலம் மின் உற்பத்தி நடைபெற்று வந்தது. தற்போது ஒரே ஒரு ஜெனரேட்டர் மற்றும் இயக்கப்பட்டு 42 மெகாவாட் மின்சாரம் மட்டும் உற்பத்தி செய்யப்படுகிறது.
முல்லைப்பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் பெய்த தொடர் மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்து வந்தது. அணையின் நீர்மட்டம் 142 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடந்த மாதம் 29-ந் தேதி மதகுகள் வழியாக கேரள பகுதிக்கு உபரி நீர் திறக்கப்பட்டதால் நீர்மட்டம் உயராமல் இருந்தது. 9 நாட்களுக்கு பிறகு தமிழக எதிர்கட்சிகள் மற்றும் விவசாயிகள் போராட்டத்தை தொடர்ந்து கேரள பகுதிக்கு திறந்து விடப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் பெரியாறு அணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவை படிப்படியாக குறைத்து நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தும் நடவடிக்கையில் தமிழக பொதுப்பணித்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் 1867 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்ட நிலையில் நேற்று 933 கன அடியாக குறைக்கப்பட்டது. இன்று காலை மேலும் குறைக்கப்பட்டு 556 கன அடி மட்டும் வெளியேற்றப்பட்டு வருகிறது.
தற்போது அணையின் நீர்மட்டம் 139.35 அடியாக உள்ளது. வினாடிக்கு 1797 கன அடி தண்ணீர் வருகிறது. நீர் இருப்பு 6962 மி. கன அடியாக உள்ளது. மேலும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் அணையின் நீர்மட்டம் அடுத்து வரும் நாட்களில் 142 அடி வரை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து பொதுப் பணித்துறை அதிகாரி தெரிவிக்கையில், முல்லைப் பெரியாறு அணையில் இருந்து கேரள பகுதிக்கு வெளியேற்றப்பட்ட உபரி நீர் நிறுத்தப்பட்டு தற்போது தமிழக பகுதிக்கு மட்டும் 556 கன அடிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டத்தை 142 அடி வரை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.
முல்லைப்பெரியாறு அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவை பொறுத்து பெரியாறு மின் உற்பத்தி நிலையத்தில் 4 ஜெனரேட்டர்கள் கொண்டு மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. கடந்த 1 மாதத்திற்கு மேலாக பெரியாறு அணையில் இருந்து 1000 கன அடிக்கு கூடுதலாக தண்ணீர் திறக்கப்பட்டதால் முழுமையாக 4 ஜெனரேட்டர்கள் மூலம் மின் உற்பத்தி நடைபெற்று வந்தது. தற்போது ஒரே ஒரு ஜெனரேட்டர் மற்றும் இயக்கப்பட்டு 42 மெகாவாட் மின்சாரம் மட்டும் உற்பத்தி செய்யப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X