என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
66 அடியை எட்டிய நீர்மட்டம்- வைகை அணை கரையோர மக்களுக்கு முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை
Byமாலை மலர்6 Nov 2021 7:15 AM GMT (Updated: 6 Nov 2021 7:15 AM GMT)
வைகை அணை நீர் மட்டம் 66 அடியை எட்டியதைத் தொடர்ந்து கரையோர மக்களுக்கு இன்று முதல் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆண்டிபட்டி:
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் தேனி, திண்டுக்கல், மதுரை உள்பட 5 மாவட்ட பாசனத்துக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. 71 அடி உயரமுள்ள இந்த அணை இந்த ஆண்டு ஏற்கனவே 2 முறை முழு கொள்ளளவை எட்டியது.
கடந்த சில நாட்களாக தேனி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வந்தது. மேலும் வருசநாடு, வெள்ளிமலை உள்ளிட்ட நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழை காரணமாக மூல வைகை ஆற்றிலும் நீர்வரத்து அதிகரித்தது.
இதனால் வைகை அணையின் நீர் மட்டம் இன்று காலை 66.01 அடியாக உயர்ந்தது. அணைக்கு 4168 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 900 கன அடி நீர் பாசனத்துக்கும் 69 கன அடி நீர் மதுரை மாநகர குடிநீருக்கும் என மொத்தம் 969 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 4810 மி.கன அடியாக உள்ளது. இதனையடுத்து வைகை அணை கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி பொதுப்பணித்துறை சார்பில் முதல் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. பொதுமக்கள் ஆற்றங்கரையோரம் குளிக்கவோ, துணிகள் துவைக்கவோ, கால்நடைகளை குளிப்பாட்டவோ கூடாது என்று தெரிவித்துள்ளனர். மேலும் அணைக்கு வரும் நீரின் அளவை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் மக்களை பாதுகாப்பாக தங்க வைக்க முன்னேற்பாடு பணிகளையும் வருவாய்த்துறையினர் செய்து வருகின்றனர்.
ஏற்கனவே மஞ்சளாறு, சோத்துப்பாறை ஆகிய அணைகள் நிரம்பிவிட்டதால் அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்பட்டு வருகிறது.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் தேனி, திண்டுக்கல், மதுரை உள்பட 5 மாவட்ட பாசனத்துக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. 71 அடி உயரமுள்ள இந்த அணை இந்த ஆண்டு ஏற்கனவே 2 முறை முழு கொள்ளளவை எட்டியது.
கடந்த சில நாட்களாக தேனி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வந்தது. மேலும் வருசநாடு, வெள்ளிமலை உள்ளிட்ட நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழை காரணமாக மூல வைகை ஆற்றிலும் நீர்வரத்து அதிகரித்தது.
இதனால் வைகை அணையின் நீர் மட்டம் இன்று காலை 66.01 அடியாக உயர்ந்தது. அணைக்கு 4168 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 900 கன அடி நீர் பாசனத்துக்கும் 69 கன அடி நீர் மதுரை மாநகர குடிநீருக்கும் என மொத்தம் 969 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 4810 மி.கன அடியாக உள்ளது. இதனையடுத்து வைகை அணை கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி பொதுப்பணித்துறை சார்பில் முதல் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. பொதுமக்கள் ஆற்றங்கரையோரம் குளிக்கவோ, துணிகள் துவைக்கவோ, கால்நடைகளை குளிப்பாட்டவோ கூடாது என்று தெரிவித்துள்ளனர். மேலும் அணைக்கு வரும் நீரின் அளவை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் மக்களை பாதுகாப்பாக தங்க வைக்க முன்னேற்பாடு பணிகளையும் வருவாய்த்துறையினர் செய்து வருகின்றனர்.
ஏற்கனவே மஞ்சளாறு, சோத்துப்பாறை ஆகிய அணைகள் நிரம்பிவிட்டதால் அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்பட்டு வருகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X