என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை மேலும் 10 காசு உயர்வு
Byமாலை மலர்1 Nov 2021 4:15 AM GMT (Updated: 1 Nov 2021 4:15 AM GMT)
நாமக்கல் மண்டலத்தில் முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை 10 காசுகள் உயர்த்தப்பட்டு ரூ.4.55-ஆக நிர்ணயிக்கப்பட்டது.
நாமக்கல்:
நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை அவ்வப்போது ஏற்ற இறக்கத்துடன் உள்ளது. கொரோனா 2-வது அலை பரவல் காரணமாக ஏப்ரல், மே மாதங்களில் முட்டை சராசரி விலை ரூ.5.09 ஆக இருந்தது. ஜூன் மாதத்தில் இதன் சராசரி ரூ.5.09 ஆகவும், ஜூலையில் ரூ.4.95 ஆகவும், ஆகஸ்டில் ரூ.4.35 ஆகவும், செப்டம்பரில் ரூ.4.39 ஆகவும், கடந்த அக்டோபர் மாதத்தில் ரூ.4.32 ஆகவும் இருந்தது.
தற்போது தீபாவளியை முன்னிட்டு முட்டை விலை உயர்ந்து வருகிறது. கடந்த மாதம் 18-ந்தேதியில் இருந்து 29-ந்தேதி வரை ரூ.4.35 ஆக இருந்த முட்டை விலை 30-ந்தேதி 10 காசுகள் உயர்ந்து ரூ.4.45 ஆனது.
இந்த நிலையில் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் அதன் தலைவர் டாக்டர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில் முட்டை விலை நிர்ணயம் தொடர்பாக பண்ணையாளர்களிடம் ஆலோசிக்கப்பட்டது. மற்ற மண்டலங்களில் விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதை கருத்தில் கொண்டும், தீபாவளி பண்டிகையையொட்டி இறைச்சி விற்பனை அதிகரிக்கும் என்பதால் முட்டை விலையில் மாற்றம் செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது. அதன்படி முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை 10 காசுகள் உயர்த்தப்பட்டு ரூ.4.55-ஆக நிர்ணயிக்கப்பட்டது.
நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை அவ்வப்போது ஏற்ற இறக்கத்துடன் உள்ளது. கொரோனா 2-வது அலை பரவல் காரணமாக ஏப்ரல், மே மாதங்களில் முட்டை சராசரி விலை ரூ.5.09 ஆக இருந்தது. ஜூன் மாதத்தில் இதன் சராசரி ரூ.5.09 ஆகவும், ஜூலையில் ரூ.4.95 ஆகவும், ஆகஸ்டில் ரூ.4.35 ஆகவும், செப்டம்பரில் ரூ.4.39 ஆகவும், கடந்த அக்டோபர் மாதத்தில் ரூ.4.32 ஆகவும் இருந்தது.
தற்போது தீபாவளியை முன்னிட்டு முட்டை விலை உயர்ந்து வருகிறது. கடந்த மாதம் 18-ந்தேதியில் இருந்து 29-ந்தேதி வரை ரூ.4.35 ஆக இருந்த முட்டை விலை 30-ந்தேதி 10 காசுகள் உயர்ந்து ரூ.4.45 ஆனது.
இந்த நிலையில் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் அதன் தலைவர் டாக்டர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில் முட்டை விலை நிர்ணயம் தொடர்பாக பண்ணையாளர்களிடம் ஆலோசிக்கப்பட்டது. மற்ற மண்டலங்களில் விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதை கருத்தில் கொண்டும், தீபாவளி பண்டிகையையொட்டி இறைச்சி விற்பனை அதிகரிக்கும் என்பதால் முட்டை விலையில் மாற்றம் செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது. அதன்படி முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை 10 காசுகள் உயர்த்தப்பட்டு ரூ.4.55-ஆக நிர்ணயிக்கப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X