search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வீட்டின் இரும்பு கேட்டில் சிக்கிய நாய்
    X
    வீட்டின் இரும்பு கேட்டில் சிக்கிய நாய்

    வீட்டின் இரும்பு கேட்டில் சிக்கிய நாயை மீட்ட தீயணைப்பு துறையினர்

    கோவை சாய்பாபாகாலனியில் உள்ள ஒரு வீட்டின் இரும்பு கேட்டின் வளையத்திற்குள் சிக்கிக்கொண்ட நாளை தீயணைப்பு துறையினர் 10 மணி நேரம் போராடி மீட்டனர்.
    கோவை :

    கோவை சாய்பாபாகாலனியில் உள்ள ஒரு வீட்டின் இரும்பு கேட்டின் வளையத்திற்குள் நாயின் தலை சிக்கிக்கொண்டது. அது எடுக்க முயற்சித்து பார்த்து பலனின்றி அதிலே படுத்துக்கொண்டது.

    இதுபற்றி அறிந்த தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். இதையடுத்து தீயணைப்பு துறையினர் அந்த நாயின் தலைப்பகுதியில் விளக்கு எண்ணைய் ஊற்றினர். பின்னர் நாயின் வாயை கட்டினர். தொடர்ந்து கொஞ்சம், கொஞ்சமாக அந்த இரும்பு வளையத்தில் இருந்து தெருநாயை விடுவித்தனர்.

    சுமார் 10 மணி நேரம் வரை அந்த நாய் இரும்பு வளையத்திற்குள் சிக்கி இருந்ததால் மிகவும் சோர்வாக காணப்பட்டது. இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் அந்த நாய்க்கு தண்ணீர் மற்றும் உணவு கொடுத்தனர்.
    Next Story
    ×