search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஓ பன்னீர்செல்வம்
    X
    ஓ பன்னீர்செல்வம்

    கோவையில் ஆயுர்வேத சிகிச்சை- ஓ.பன்னீர்செல்வத்துக்கு மூலிகை குளியல்

    கோவையில் உள்ள ஆயுர்வேத சிகிச்சை மருத்துவமனையில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு மூலிகை குளியல், எண்ணெய் குளியல் உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது.
    கோவை:

    அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் புத்துணர்வு சிகிச்சைக்காக அவ்வப்போது கோவையில் உள்ள ஆயுர்வேத மருத்துவமனைகளுக்கு வந்து சில நாட்கள் மருத்துவமனையிலேயே தங்கி இருந்து சிகிச்சை பெற்று செல்வது வழக்கம்.

    இதுவரை 7-க்கும் மேற்பட்ட முறை கோவைக்கு வந்து ஆயுர்வேத சிகிச்சை பெற்று சென்றுள்ளார். இந்தநிலையில் மீண்டும் ஆயுர்வேத சிகிச்சை பெறுவதற்காக கடந்த 18-ந் தேதி இரவு ஓ.பன்னீர்செல்வம் கோவை வந்தார்.

    கணபதி பகுதியில் உள்ள ஆயுர்வேத சிகிச்சை மையத்துக்கு சென்ற அவர் அங்கேயே தங்கினார். 19-ந் தேதி முதல் அவருக்கு சிகிச்சைகள் தொடங்கின.

    உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கும் வகையில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு மூலிகை குளியல், எண்ணெய் குளியல் உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது.

    மேலும் காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட இயற்கை உணவுகளையே சாப்பிடுவதற்காக கொடுக்கிறார்கள். அவ்வப்போது காய்கறிகளால் தயாரான சூப் வகைகளும், கஞ்சியும் வழங்கப்படுகிறது. இதுதவிர மன அமைதிக்காக தியான பயிற்சியும் அளிக்கப்படுகிறது.

    இந்த சிகிச்சை ஒரு வாரம் தொடர்ந்து நடைபெறும். சிகிச்சை முடிந்ததும் ஓ.பன்னீர்செல்வம் சென்னை திரும்புவார் என கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×