என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ரூ.100ஐ கடந்த 1 லிட்டர் டீசல் விலை- கேக் வெட்டி ஆதங்கத்தை வெளிப்படுத்திய லாரி உரிமையாளர்கள்
Byமாலை மலர்18 Oct 2021 4:02 AM GMT (Updated: 18 Oct 2021 4:02 AM GMT)
பெட்ரோலைத் தொடர்ந்து டீசலும் 1 லிட்டர் ரூ.100-ஐ கடந்ததால் அதிர்ச்சியடைந்த லாரி உரிமையாளர்கள் கேக் வெட்டி நூதன முறையில் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.
தேவதானப்பட்டி:
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையை பொருத்து பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி தமிழகத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100-ஐ கடந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தேனி மாவட்டத்தில் 1 லிட்டர் பெட்ரோல் ரூ.103.92க்கும் 1 லிட்டர் டீசல் ரூ.100.05க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதுவரை பெட்ரோல் மட்டுமே சதத்தை கடந்து விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் டீசலும் அந்த சாதனையை முறியடித்துள்ளதால் தேனி மாவட்ட லாரி உரிமையாளர்கள் சார்பில் கேக் வெட்டி நூதன முறையில் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.
இது குறித்து லாரி உரிமையாளர்கள் தெரிவிக்கையில், பெட்ரோல் டீசல் விலை உயர்வால் அனைத்து விலையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
விலை உயர்வை கட்டுப்படுத்த கோரி பல்வேறு அரசியல் கட்சியினர், வாகன உரிமையாளர்கள் போராடி வந்தாலும் மத்திய அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தேனி மாவட்டத்தில் 1 லிட்டர் டீசல் ரூ.100-ஐ கடந்து விற்கப்படுவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மத்திய அரசுக்கு தெரிவிக்கும் விதமாக நூதன முறையில் கேக் வெட்டி அதனை அனைவருக்கும் வழங்கினோம்.
சாமானிய மக்களை பாதிக்கும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் தெரிவித்தனர்.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையை பொருத்து பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி தமிழகத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100-ஐ கடந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தேனி மாவட்டத்தில் 1 லிட்டர் பெட்ரோல் ரூ.103.92க்கும் 1 லிட்டர் டீசல் ரூ.100.05க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதுவரை பெட்ரோல் மட்டுமே சதத்தை கடந்து விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் டீசலும் அந்த சாதனையை முறியடித்துள்ளதால் தேனி மாவட்ட லாரி உரிமையாளர்கள் சார்பில் கேக் வெட்டி நூதன முறையில் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.
இது குறித்து லாரி உரிமையாளர்கள் தெரிவிக்கையில், பெட்ரோல் டீசல் விலை உயர்வால் அனைத்து விலையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
விலை உயர்வை கட்டுப்படுத்த கோரி பல்வேறு அரசியல் கட்சியினர், வாகன உரிமையாளர்கள் போராடி வந்தாலும் மத்திய அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தேனி மாவட்டத்தில் 1 லிட்டர் டீசல் ரூ.100-ஐ கடந்து விற்கப்படுவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மத்திய அரசுக்கு தெரிவிக்கும் விதமாக நூதன முறையில் கேக் வெட்டி அதனை அனைவருக்கும் வழங்கினோம்.
சாமானிய மக்களை பாதிக்கும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் தெரிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X