search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மத்திய அரசு
    X
    மத்திய அரசு

    மதுரை எய்ம்ஸ் ஆஸ்பத்திரியை வாடகை கட்டிடத்தில் தொடங்க மத்திய அரசு முடிவு

    மதுரை எய்ம்ஸ் ஆஸ்பத்திரியின் தற்காலிக வெளிநோயாளிகள் சிகிச்சை பிரிவை வாடகை கட்டிடத்தில் தொடங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
    மதுரை:

    மதுரையில் அரசு ஆஸ்பத்திரி மற்றும் அரசு மருத்துவக் கல்லூரியில் கட்டப்பட்டு வரும் கட்டிடப் பணிகளை தமிழக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் நேற்று ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. சென்னை, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் மட்டுமே கொரோனா பாதிப்பு 100-க்கும் அதிகமாக உள்ளது.

    மதுரையில் எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கான கட்டிட பணிகளை தொடங்க வேண்டும் என முதல்-அமைச்சர் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

    எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்காக மத்திய அரசு ஒருங்கிணைப்பு குழு அமைத்துள்ளது. அந்த ஒருங்கிணைப்பு குழுவுடன் 20-ந்தேதி ஆலோசனை நடத்த உள்ளோம். மதுரை எய்ம்ஸ் ஆஸ்பத்திரியின் தற்காலிக வெளி நோயாளிகள் சிகிச்சை பிரிவை வாடகை கட்டிடத்தில் தொடங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து முதல்-அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று கொள்கை ரீதியான முடிவு எடுக்கப்படும். 18 வயதுக்கு கீழே உள்ளவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது குறித்து மத்திய அரசு அறிவிக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×