என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
6 ஊராட்சிகளில் 100 சதவீதம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது
Byமாலை மலர்7 Oct 2021 4:29 AM GMT (Updated: 7 Oct 2021 4:29 AM GMT)
கோவை மாவட்டத்தில் உள்ள 6 ஊராட்சிகளில் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கோவை:
தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கொரோனா 3-வது அலையின் தீவிரத்தை கட்டுப்படுத்தும் விதமாக குறைந்தபட்சம் 70 சதவீத மக்களுக்கு தடுப்பூசி செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி கோவையில் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
கடந்த 4 வாரங்களாக ஞாயிற்றுக்கிழமைகளில் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. முதல் கட்டமாக நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாமில் 1.51 லட்சம் பேருக்கும், 2-வது கட்டமாக 94 ஆயிரம் பேருக்கும், 3-ம் கட்டமாக 1.13 லட்சம் பேருக்கும், 4-வது மெகா தடுப்பூசி முகாமில் 81,454 பேருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு கோவை மாவட்டத்தில் மட்டும் 4 லட்சம் பேருக்கு மேல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் கோவை மாவட்டத்தில் உள்ள 6 ஊராட்சிகளில் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து சுகாதாரத்துறை துணை இயக்குனர் அருணா கூறியதாவது:-
கோவை மாவட்டத்தில் உள்ள 228 ஊராட்சிகளில் தொண்டாமுத்தூர் வட்டாரத்தில் ஜாகீர்நாயக்கன் பாளையம், காரமடை வட்டாரத்தில் சிக்காரம் பாளையம், நெல்லித்துறை, அன்னூர் வட்டாரத்தில் கரியாம்பாளைம், கிணத்துக்கடவு வட்டாரத்தில் கக்கடவு, வெள்ளருக்கம்பாளையம் ஆகிய 6 ஊராட்சிகளில் 100 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
மற்ற ஊராட்சிகளில் 90 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அனைத்து ஊராட்சிகளிலும் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.
தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கொரோனா 3-வது அலையின் தீவிரத்தை கட்டுப்படுத்தும் விதமாக குறைந்தபட்சம் 70 சதவீத மக்களுக்கு தடுப்பூசி செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி கோவையில் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
கடந்த 4 வாரங்களாக ஞாயிற்றுக்கிழமைகளில் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. முதல் கட்டமாக நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாமில் 1.51 லட்சம் பேருக்கும், 2-வது கட்டமாக 94 ஆயிரம் பேருக்கும், 3-ம் கட்டமாக 1.13 லட்சம் பேருக்கும், 4-வது மெகா தடுப்பூசி முகாமில் 81,454 பேருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு கோவை மாவட்டத்தில் மட்டும் 4 லட்சம் பேருக்கு மேல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் கோவை மாவட்டத்தில் உள்ள 6 ஊராட்சிகளில் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து சுகாதாரத்துறை துணை இயக்குனர் அருணா கூறியதாவது:-
கோவை மாவட்டத்தில் உள்ள 228 ஊராட்சிகளில் தொண்டாமுத்தூர் வட்டாரத்தில் ஜாகீர்நாயக்கன் பாளையம், காரமடை வட்டாரத்தில் சிக்காரம் பாளையம், நெல்லித்துறை, அன்னூர் வட்டாரத்தில் கரியாம்பாளைம், கிணத்துக்கடவு வட்டாரத்தில் கக்கடவு, வெள்ளருக்கம்பாளையம் ஆகிய 6 ஊராட்சிகளில் 100 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
மற்ற ஊராட்சிகளில் 90 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அனைத்து ஊராட்சிகளிலும் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X