search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உயிரிழப்பு
    X
    உயிரிழப்பு

    மதுரை ஐகோர்ட்டில் கட்டிட தொழிலாளி தவறி விழுந்து உயிரிழப்பு

    மதுரை ஐகோர்ட்டில் கட்டிட தொழிலாளி தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மதுரை:

    மதுரை ஐகோர்டடில் புதிய கட்டிடங்களுக்கான கட்டுமான பணி நடந்து வருகிறது. மதுரை மானகிரியை சேர்ந்த பாண்டி (வயது 52) என்பவர் கடந்த 3 நாட்களுக்கு முன்பு கட்டிட வேலைக்கு வந்து உள்ளார்.

    பணியின்போது அவர் மரப்பலகை சாய்மானத்தில் ஏறிச்சென்றார். அப்போது பாண்டி நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த அடிபட்டது. உடனே அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்தபோதிலும் டாக்டர்களின் சிகிச்சை பலனின்றி பாண்டி இன்று பரிதாபமாக இறந்தார்.

    இது தொடர்பாக மதுரை ஐகோர்ட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×